Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3035 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3035திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (நான் ஒருவிதமான கிஞ்சித்காரமும் செய்யப்பெற்றிலேனாகிலும், அநந்யார்ஹமாக்கி அடிமை கொள்ளுமியல்வினனான வுன்னுடைய வடிவு என் ஆத்மாவை விஷயீகரித்திராநின்றதென்கிறார்.) 7
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே.–4-3-7
குரை கழல்கள் நீட்டி,kurai kazhalgal neetti - (வீரக்கழல்) ஒலிக்கப்பெற்ற திருவடிகளைப் பரப்பி
மண் கொண்ட,maṇ koṇḍa - ஜகத்தை அளந்து கொண்ட
கோலம் வாமனா,kolam vaamana - வடிவழகிய வாமன மூர்த்தியே!
குரை கழல்,kurai kazhal - அத்திருவடிகளைக் குறித்து
கை கூப்புவார்கள்,kai kooppuvargal - ஓர் அஞ்ஜலிபண்ணுமவர்கள்
கூட நின்ற,kooda ninra - தன்னையே வந்து அடையும் படி நின்ற
மாயனே,maayaney - ஆச்சரிய பூதனே!
விரைகொள் பூவும்,viraikol poovum - பரிமளம் கொண்ட பூக்களையும்
நீரும்,neerum - (பாத்யம் முதலியவற்றுக்கான) தீர்த்தத்தையும்
கொண்டு,kondu - ஏந்திக்கொண்டு
ஏத்த மாட்டேன் ஏலும்,yetha maatteen yelum - உன்னைத் துதிக்கவல்லேனல்லெனினும்,
உரை கொள் சோதி,urai kol chothi - வாய்கொண்டு சொல்ல வொண்ணாதபடி வாக்கை மீறியிருக்கின்ற சோதியையுடைய
உன் திரு உருவம்,un thiru uruvam - உன்னுடைய திருமேனியானது
என்னது ஆவி மேலது ஏ,ennathu aavi melathu ye - என்னுடைய ஸத்தையைப் பற்றியிரா நின்றதே! இது என்ன அற்புதம்!.