| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3035 | திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (நான் ஒருவிதமான கிஞ்சித்காரமும் செய்யப்பெற்றிலேனாகிலும், அநந்யார்ஹமாக்கி அடிமை கொள்ளுமியல்வினனான வுன்னுடைய வடிவு என் ஆத்மாவை விஷயீகரித்திராநின்றதென்கிறார்.) 7 | குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா! குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே! விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன் உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே.–4-3-7 | குரை கழல்கள் நீட்டி,kurai kazhalgal neetti - (வீரக்கழல்) ஒலிக்கப்பெற்ற திருவடிகளைப் பரப்பி மண் கொண்ட,maṇ koṇḍa - ஜகத்தை அளந்து கொண்ட கோலம் வாமனா,kolam vaamana - வடிவழகிய வாமன மூர்த்தியே! குரை கழல்,kurai kazhal - அத்திருவடிகளைக் குறித்து கை கூப்புவார்கள்,kai kooppuvargal - ஓர் அஞ்ஜலிபண்ணுமவர்கள் கூட நின்ற,kooda ninra - தன்னையே வந்து அடையும் படி நின்ற மாயனே,maayaney - ஆச்சரிய பூதனே! விரைகொள் பூவும்,viraikol poovum - பரிமளம் கொண்ட பூக்களையும் நீரும்,neerum - (பாத்யம் முதலியவற்றுக்கான) தீர்த்தத்தையும் கொண்டு,kondu - ஏந்திக்கொண்டு ஏத்த மாட்டேன் ஏலும்,yetha maatteen yelum - உன்னைத் துதிக்கவல்லேனல்லெனினும், உரை கொள் சோதி,urai kol chothi - வாய்கொண்டு சொல்ல வொண்ணாதபடி வாக்கை மீறியிருக்கின்ற சோதியையுடைய உன் திரு உருவம்,un thiru uruvam - உன்னுடைய திருமேனியானது என்னது ஆவி மேலது ஏ,ennathu aavi melathu ye - என்னுடைய ஸத்தையைப் பற்றியிரா நின்றதே! இது என்ன அற்புதம்!. |