| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3036 | திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (எனக்காக ஸகலலோகங்களையும் வியாபித்து என்னையங்கீகரித்த உன் படி பேச்சுக்கு நிலமன்று என்கிறார்.) 8 | என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும் துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்! உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்; இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8 | என்னது ஆவி மேலியாய்,ennathu aavi meliyai - என் ஆத்மவஸ்துவிலே அபிநிவேசமுடையனாய்க் கொண்டு ஏர்கொள் ஏழ் உலகமும்,erkoll ezh ulagamum - அழகிய கைல லோகங்களிலும் முற்றும் ஆகி நின்ற,mutrum aagi ninra - ஸகல பதார்த்தங்களும் தனக்கு ப்ரகாரமாம்படி நின்ற சோதி ஞானம் மூர்த்தியாய்,chothi gnanam moorthiyai - சோதிமயமான ஞானத்தை ஸ்வரூபமாகவுடையவனே! என்னது ஆவி,ennathu aavi - என் ஆத்மஸ்வரூபம் உன்னதும்,unnathum - நீயிட்ட வழக்காகவும் என்னதும்,ennathum - நானிட்ட வழக்காகவுமான இன்ன வண்ணமே நின்றாய்,inna vanname ninraai - இப்படியிலே நின்றாய் என் உரைக்க வல்லேன்,en uraikka valleyn - இதற்கு என்ன பாசுர மிட்டுச் சொல்லுவேன்? |