| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3037 | திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (எம்பெருமானுடைய ப்ரணயித்வகுணம் தம்முடைய பேச்சுக்கு நிலமன்று என்பதை அழகுபட அருளிச்செய்கிறார்.) 9 | உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்; புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே! இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9 | புரைப்பு இலாத பரம்பரனே,puraippu ilaatha parambarane - புரையற்ற பரத்வம் பொருந்திய எம்பெருமானே! பொய் இலாத,poy ilaatha - (என்னோடுண்டான கலவியில்) பொய்யில்லாத பரம் சுடரே,param sudare - பரஞ்சோதிப் பெருமானே! உரைக்க வல்லேன் அல்லேன்,uraikka valleyn alleyn - நான் ஒன்றும் சொல்ல சக்தியுடையேனல்லேன்; உலப்பு இல்,ulappu il - முடிவில்லாத உன் கீர்த்தி வெள்ளத்தின்,un keerthi vellaththin - உனது ப்ரணயித்வ குணக் கடலினுடைய கரைக் கண்,karaik kan - கரையிடத்து நான் என்று செல்வன்,naan enru selvan - நான் என்றைக்கு அடியிடுவேன்? (ஒரு நாளும் அடியிடமாட்டேன்;) காதல்,kaadhal - பிரேமத்தினால் மையல் ஏறிறனேன்,maiyal Eriranaen - பிச்சேறிக் கிடக்கிறேனத்தனை நல்ல,nalla - விலக்ஷணர்களான மேல் மக்கள்,mel makkal - நித்ய ஸூரிகள் இரைத்து ஏத்த,iraitthu Ethan - பேராரவாரஞ்செய்து துதிக்க (அவ்வழியைப் பின்பற்றி) யானும் ஏத்தினேன்,yaanum Ethanain - நானும் சிறிது துதித்தேனித்தனை. |