| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3038 | திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (ஒருவராலும் எல்லைகாண வொண்ணாதபடி அளவிறந்த பெருமையையுடைய பெருமானை நான் ஸத்தை பெறுவதற்காக ஏத்தினேனத்தனை யென்கிறார்.) 10 | யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும் தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும் தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10 | யானும்,Yanum - எம்பெருமானருளால் அறிவுபெற்ற நானும் துதித்து, ஏத்தி,Eththi - துதித்து, முற்றும் ஏழ் உலகும் ஏத்தி,Mutrum ezhu ulakum eththi - எல்லாவுலகங்களும் ஒன்று கூடி யேத்தி, பின்னையும்,Pinnaiyum - அதற்கு மேலே தானும் ஏத்திலும்,Thanum eththilum - ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தனான தானுங்கூடி ஏத்தினாலும் தன்னை ஏத்த ஏத்த,Thannai eththa eththa - தன்னைத்துதிக்கத்துதிக்க எங்கு ஏய்தும்,Engu eythum - முடிவு பெறுவது எது? (ஆகிலும்) யான் உய்வான்,Yan uyyvan - நான் தரித்திருப்பதற்காகவே, தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்திப்ப,Thenum palum kannalum amudhum aaki thiththippa - தேனும் பாலும் கன்னலும் அமுதும போலே ரஸிக்க, யானும் எம்பிரானையே ஏத்தினேன்,Yanum empiranaie eththinen - நானும் எம்பெருமானையே ஏத்தினேன். |