| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3040 | திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (பராங்குச நாயகியின் திருத்தாயார் மகளுடைய செய்தியை வினவ வந்தவர்களுக்கு அறிவியா நின்று கொண்டு ‘இப்படி யிவளை எம்பெருமான் பிச்சேற்றினானே! இதற்கு நான் என் செய்வேனென்கிறாள்.) 1 | மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்; விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்; கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என் பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1 | பெய் வளையீர்,Pei valaiyeer - கையில் வளையணிந்த மாதர்காள்! மண்ணை இருந்து துழாவி,Mannai irundhu thuzhaavi - (என் மகளானவள்) பூமியைத் துழாவி இது வாமனன் மண் என்னும்,Ithu vaamanan man ennum - இது (எம்பெருமான்) வாமனனாய் அளந்து கொண்ட மண்’ என்று கூறுகின்றாள்: விண்ணை தொழுது,Vinnai thozhudhu - ஆகாசத்தை (நோக்கி) அஞ்சலி பண்ணி அவன் மேவு வைகுந்தம் என்று,Avan mevva vaikuntham endru - ‘அவ்வெம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்ரீ வைகுண்டம்’ என்று சொல்லி கை காட்டும்,Kai kaattum - தன் கைகளாலே (பிறர்க்கும்) காட்டா நின்றாள்; உள் நீர்,Ul neer - அகவாயில் கண்ணீரானது கண்ணை மல்க நின்று,Kannai malga nindru - கண்ணையும் விஞ்சிப் புறப்படும்படி நின்று கடல் வண்ணன் என்னும்,Kadal vannan ennum - கடல்போலும் நிறத்தையுடையவன் என்று சொல்லுகின்றாள்; அன்னே- என் பெண்ணை பெரு மயல் செய்தார்க்கு -என் செய்தேன்,Anne - en pennai peru mayal seidharkku - en seidhen - அம்மே!என்னுடைய மகளை இப்படி அதிசயமான பிச்சேறும்படி பண்ணினவருக்கு -யாது செய்வேன்? |