Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3041 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3041திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (என் தெய்வம் உருவில் சிறுமான் -என்னுடைய (நித்யஸூரிகள் வடிவுபோல) அப்ராக்ருதமான வடிவை யுடையளாய் மான்போல் இளைய பருவத்தை யுடையளான இவள் செய்கின்ற காரியங்கள் ஒன்றும் அறிகிலேன்.) 2
பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2
பெய் வளை கைகளை,Pey valai kaigalai - (பலகாலும் கழன்று பிறகு) இடப்படாநிற்கிற வளைகளையுடைய தனது கைகைகளை
கூப்பி,Kooppi - குவித்து அஞ்சலி பண்ணி (கடலைப் பார்த்து)
பிரான்,Piraan - உபகார சீலனான எம்பெருமான்
கிடக்கும்,Kidakkum - (எனக்கு முகங்காட்டப்) பள்ளிகொண்டிருக்கிற
கடல் என்னும்,Kadal ennum - கடல் (இது) என்று சொல்லுவது;
செய்யது ஓர் ஞாயிற்றை காட்டி,Seyyadhor nyaayitrrai kaatti - சிவந்த ஒளியில் ஒப்பற்றவனான சூரியனைச் சுட்டிக் காட்டி
சிரிதரன் மூர்த்தி ஈது என்னும்,Sreedharan moorthi idhu ennum - ‘பெரிய பிராட்டியாரோடே கூடியுள்ள எம்பெருமானது வடிவு இது’ என்று சொல்லுவாள்;
கையும்,Kaiyum - (தான் அவனைக்கிட்டி அநுபவிக்கப்பெறாமையாலே) வாடுவாள்;
கண் நீர் மலக நின்று,Kann neer malaga nindru - (அந்த வாட்டத்தினாலே) கண்ணீர் பெருக நின்று
நாரணன் என்னும்,Naaranan ennum - ‘நாரணன்’ என்று வாய்வெருவுவாள்,
அன்னே,Anne - அம்சே!