Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3042 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3042திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (மகளுடைய அதிப்ரவ்ருத்திகளைச் சொல்லப் புகுந்து, இவற்றுக்குக் கணக்கில்லை யென்கிறாள்.) 3
அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3
வினையுடை யாட்டியேன் பெற்ற,Vinaiyudai yaattiyen petra - கொடுவினையேனாகிய நான் பெற்ற
செறி வளை முன் கை சிறு மான்,Seri valai mun kai siru maan - நெருங்கின வளையல்களயைணிந்த முன்கைகளையுடைய இவ்விளம் பெண்ணானவள்
அறியும்,Ariyum - சுடுமென்று எல்லாராலும் அறியப்பட்ட
செம் தீயை தழுவி,Sem theeyai thazhuvi - சிவந்த நெருப்பைத் தழுவி
அச்சுதன் என்னும்,Achuthan ennum - ‘எம்பெருமான்’ என்கிறாள்;
மெய் வேவாள்,Mei vevaal - உடம்பு வேகின்றிலள்;
எறியும்,Eriyum - வீசுகின்ற
தண் காற்றை தழுவி,Than kaatrai thazhuvi - குளிர்ந்த காற்றைத் தழுவி
என்னுடை கோவிந்தன் என்னும்,Ennudai Govindhan ennum - ‘என்னுடைய கண்ணன்’ என்கிறாள்;
வெறிகொள்,Verikol - பரிமளம்மிக்க
துழாய் மலர்,Thuzhai malar - திருத்துழாய் மலர்கள்
நாறும்,Naarum - மணக்கப் பெற்றிருக்கின்றாள்:
செய்கின்றது,Seygindrathu - (இங்ஙனே இவள்) செய்கின்ற தொழில்கள்
என் கண்ணுக்கு ஒன்றே,En kannukku ondre - என் கண்களுக்கு ஒன்றுதானா? பலபல.