| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3042 | திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (மகளுடைய அதிப்ரவ்ருத்திகளைச் சொல்லப் புகுந்து, இவற்றுக்குக் கணக்கில்லை யென்கிறாள்.) 3 | அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்; எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்; வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3 | வினையுடை யாட்டியேன் பெற்ற,Vinaiyudai yaattiyen petra - கொடுவினையேனாகிய நான் பெற்ற செறி வளை முன் கை சிறு மான்,Seri valai mun kai siru maan - நெருங்கின வளையல்களயைணிந்த முன்கைகளையுடைய இவ்விளம் பெண்ணானவள் அறியும்,Ariyum - சுடுமென்று எல்லாராலும் அறியப்பட்ட செம் தீயை தழுவி,Sem theeyai thazhuvi - சிவந்த நெருப்பைத் தழுவி அச்சுதன் என்னும்,Achuthan ennum - ‘எம்பெருமான்’ என்கிறாள்; மெய் வேவாள்,Mei vevaal - உடம்பு வேகின்றிலள்; எறியும்,Eriyum - வீசுகின்ற தண் காற்றை தழுவி,Than kaatrai thazhuvi - குளிர்ந்த காற்றைத் தழுவி என்னுடை கோவிந்தன் என்னும்,Ennudai Govindhan ennum - ‘என்னுடைய கண்ணன்’ என்கிறாள்; வெறிகொள்,Verikol - பரிமளம்மிக்க துழாய் மலர்,Thuzhai malar - திருத்துழாய் மலர்கள் நாறும்,Naarum - மணக்கப் பெற்றிருக்கின்றாள்: செய்கின்றது,Seygindrathu - (இங்ஙனே இவள்) செய்கின்ற தொழில்கள் என் கண்ணுக்கு ஒன்றே,En kannukku ondre - என் கண்களுக்கு ஒன்றுதானா? பலபல. |