Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3047 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3047திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (செல்வம் மிக்க அரசர்களைக் கண்டால் திருமாலைக்கண்டதாகவே சொல்லுவளாம்.) 8
திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8
திரு உடை,Thiru udai - பூர்ணமான செல்வத்தையுடைய
மன்னரை காணில்,Mannarai kaanil - அரசர்களைக் கண்டால்
திருமாலை,Thirumaalai - திருமகள் கொழுநனான எம்பெருமானை
கண்டேனே என்னும்,Kandeney enum - கண்டேனே! என்று கூறுவாள்;
உரு உடை,Uru udai - விலக்ஷண வடிவங்களையுடைய
வண்ணங்கள் காணில்,Vannangal kaanil - (காயாம்பூ முதலிய) பதார்த்தங்களைக் கண்டால்
உலகளந்தான் என்று துள்ளும்,Ulaga landhaan endru thullum - (இச்செவியுள்ளது) திருவுலகளந்தருளின எம்பெருமானுக்கு’ என அத்யவஸித்து ப்ரீதியோடே ஆடுவாள்?
கரு உடை,Karu udai - விக்ரஹயுக்தமான
தேவு இல்கள் எல்லாம்,Thevu ilgal ellaam - தேவாலயங்கள் யாவும்
கடல்வண்ணன் கோயிலே என்னும்,Kadalvannan koyiley enum - எம்பெருமான் (எழுந்தருளியுள்ள) கோவில்களே என்று கூறுவாள்
வெருவிலும் வீழ்விலும்,Veruvilum veezhvilum - அஞ்சினபோதும் (ஆர்த்தியாலே) மோஹித்தபோதும்
ஓவா,Ovaa - ஒழியாதவளாகி
கண்ணன் கழல்கள் விரும்பும்,Kannan kazhalgal virumbum - க்ருஷ்ணன் திருவடிகளையே பேணா நின்றாள்.