| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3047 | திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (செல்வம் மிக்க அரசர்களைக் கண்டால் திருமாலைக்கண்டதாகவே சொல்லுவளாம்.) 8 | திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்; உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்; ‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்; வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8 | திரு உடை,Thiru udai - பூர்ணமான செல்வத்தையுடைய மன்னரை காணில்,Mannarai kaanil - அரசர்களைக் கண்டால் திருமாலை,Thirumaalai - திருமகள் கொழுநனான எம்பெருமானை கண்டேனே என்னும்,Kandeney enum - கண்டேனே! என்று கூறுவாள்; உரு உடை,Uru udai - விலக்ஷண வடிவங்களையுடைய வண்ணங்கள் காணில்,Vannangal kaanil - (காயாம்பூ முதலிய) பதார்த்தங்களைக் கண்டால் உலகளந்தான் என்று துள்ளும்,Ulaga landhaan endru thullum - (இச்செவியுள்ளது) திருவுலகளந்தருளின எம்பெருமானுக்கு’ என அத்யவஸித்து ப்ரீதியோடே ஆடுவாள்? கரு உடை,Karu udai - விக்ரஹயுக்தமான தேவு இல்கள் எல்லாம்,Thevu ilgal ellaam - தேவாலயங்கள் யாவும் கடல்வண்ணன் கோயிலே என்னும்,Kadalvannan koyiley enum - எம்பெருமான் (எழுந்தருளியுள்ள) கோவில்களே என்று கூறுவாள் வெருவிலும் வீழ்விலும்,Veruvilum veezhvilum - அஞ்சினபோதும் (ஆர்த்தியாலே) மோஹித்தபோதும் ஓவா,Ovaa - ஒழியாதவளாகி கண்ணன் கழல்கள் விரும்பும்,Kannan kazhalgal virumbum - க்ருஷ்ணன் திருவடிகளையே பேணா நின்றாள். |