| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3048 | திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (பகவர் என்றது பரமை காந்திகள் என்றபடி. ஜ்ஞானானுஷ்டநன பரிபூர்ணர்களான உத்தமாச்ரமிகள் என்று கொள்க. பகவானைச் சொல்லுகிற சொல்லையிட்டே அவர்களைக் கூறினது-அவர்கள் பகவானில் வேறுபடாதவர்கள் என்பதைக் காட்டுதற்கென்க. அப்படிப்பட்டவர்களைக் கண்டால், உலகங்களை யெல்லாம திருவயிற்றிலே வைத்து நோக்கின பெருமானாகவே பிரதிபத்தி பண்ணுவள். ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் என்கிற பகவத் கீதையிலே நோக்குப்போலும். கரும்பெரு மேகங்கள் காணில் = கறுத்துப் பெருத்து விடாய் தீர்க்குமதான மேகத்தைக் கண்டவாறே அப்படிப்பட்ட வடிவையுடையனான கண்ணபிரான் தானே வந்து தோன்றினனாகக்கொண்டு கோலாஹலங்கள் செய்யா நிற்பள்.) 9 | விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்; கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்; பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்; அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9 | பகவரை,Pagavarai - ஸந்நியாஸிகளை காணில்,Kaanil - கண்டால் விரும்பி,Virumbi - ஆதரவு கொண்டு பேணி வியல் இடம் உண்டானே என்னும்,Viyal idam undaane enum - அகன்ற உலகத்தை ப்ரளயாபத்திலே உண்டு திருவயிற்றிலே வைத்து ரகூஷித்த ஸர்வரக்ஷகனே என்பாள்; கரு பெரு மேகங்கள் காணில்,Karu peru megangal kaanil - கறுத்துப்பெருத்த மேகங்களைக் கண்டால் கண்ணன் என்று,Kannan endru - கண்ணபிரான் என்று நினைத்து ஏற பறக்கும்,Era parakkum - (அங்கே செல்ல) மேலேயெழுந்து பறப்பதற்கு அலமரா நிற்பாள்; பெரு புலம் ஆநிரை காணில்,Peru pulam aanirai kaanil - பருத்து அழகிய பசுக்களைக் கண்டால் பிரான்,Piraan - (அவற்றை மேய்த்து ரகூஷிப்பவனான) உபகாரகன் உளன் என்று,Ulan endru - கூடவருகிறான் என்று நினைத்து பின் செல்லும்,Pin sellum - அப்பசுக்களின் பின்னே போகிறாள் பெறல் அரு பெண்ணினை,Peral aru penninai - பெறுதற்கு அரியளான இப் பெண்ணை மாயோன்,Maayon - எம்பெருமான் அலற்றி,Alatri - வாய்விட்டு அலறும்படி பண்ணி அயர்ப்பிக்கின்றாள்,Ayarpikkindraal - (அதற்குமேலே) மோஹிக்கும்படி பண்ணுகிறான். |