| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3049 | திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (பராங்குசநாயகியின் பலவகைப்பட்ட நிலைமைகளை யெடுத்துரைக்கின்றள் திருத்தாய்.) 10 | அயர்க்கும்;சுற்றும் பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்; வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்; பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்; மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10 | அயர்க்கும்,Ayarkkum - மோஹியா நிற்பாள் சுற்றும் பற்றி நோக்கும்,Sutrum patri nokkum - (கண்ணன் தன்னிடத்து வாராதொழியான்று நினைத்து அவன் வருகையை) சுற்றிலும் பலகாலும் பார்ப்பாள். அகல நீள் நோக்கு கொள்ளும்,Akala neel nokku kollum - (அவ்வளவிலும் காணாமையினாலே அவன் துர்ரத்திலே நிற்கிறகவெண்ணி) பார்த்த கண்ணை ஓட்டி நெடும்போது பாராநிற்பள் (அங்கும் காணாமையிலே) வியர்க்கும்,Viyarkkum - வேர்த்து நீராக நிற்கும் மழை கண் துளும்ப,Mazhai kann thulumba - மழை போலக் கண்களில் நீர் துளும்பும்படி வெம்,Vem - வெவ்விதாக உயிர்க்கொள்ளும்,Uyirkollum - நெடுமூச்செறிகின்றள் மெய் சோரும்,Mey sorum - (இத்தகைய பரிதாபத்தாலே) சரீரம் தரிக்க மாட்டாமல் வாடுவாள் பெயர்த்தும்,Peyartthum - பின்னையும் (ஆசைமிகுதியினாலே) கண்ணா என்று பேசும்,Kanna endru pesum - க்ருஷ்ணனே! என்று கூப்பிடுவாள் (அவ்வளவிலே வந்தானாகவெண்ணி) வா என்று கூவும்,Vaa endru koovum - பெருமானே என்னுடைய ஸ்வாமியே வரலாகாதோ? என்று அழைப்பாள் மயல்,Mayal - (இப்படிப்) பிச்சேறும்படி பெரு காதல்,Peru kaadhal - பெரிய காதலையுடையளான என் பேதைக்கு,En pethakku - என் சொற்கேளாப் பெண்ணுக்கு வல்வினையேன்,Valvinaiyen - இவளை இப்படிக் கானும்படி ) கொடிய பாபத்தையுடைய நான் என் செய்தேன்,En seydhen - என்ன செய்வேன்.? |