Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3049 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3049திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (பராங்குசநாயகியின் பலவகைப்பட்ட நிலைமைகளை யெடுத்துரைக்கின்றள் திருத்தாய்.) 10
அயர்க்கும்;சுற்றும் பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10
அயர்க்கும்,Ayarkkum - மோஹியா நிற்பாள்
சுற்றும் பற்றி நோக்கும்,Sutrum patri nokkum - (கண்ணன் தன்னிடத்து வாராதொழியான்று நினைத்து அவன் வருகையை) சுற்றிலும் பலகாலும் பார்ப்பாள்.
அகல நீள் நோக்கு கொள்ளும்,Akala neel nokku kollum - (அவ்வளவிலும் காணாமையினாலே அவன் துர்ரத்திலே நிற்கிறகவெண்ணி) பார்த்த கண்ணை ஓட்டி நெடும்போது பாராநிற்பள் (அங்கும் காணாமையிலே)
வியர்க்கும்,Viyarkkum - வேர்த்து நீராக நிற்கும்
மழை கண் துளும்ப,Mazhai kann thulumba - மழை போலக் கண்களில் நீர் துளும்பும்படி
வெம்,Vem - வெவ்விதாக
உயிர்க்கொள்ளும்,Uyirkollum - நெடுமூச்செறிகின்றள்
மெய் சோரும்,Mey sorum - (இத்தகைய பரிதாபத்தாலே) சரீரம் தரிக்க மாட்டாமல் வாடுவாள்
பெயர்த்தும்,Peyartthum - பின்னையும் (ஆசைமிகுதியினாலே)
கண்ணா என்று பேசும்,Kanna endru pesum - க்ருஷ்ணனே! என்று கூப்பிடுவாள் (அவ்வளவிலே வந்தானாகவெண்ணி)
வா என்று கூவும்,Vaa endru koovum - பெருமானே என்னுடைய ஸ்வாமியே வரலாகாதோ? என்று அழைப்பாள்
மயல்,Mayal - (இப்படிப்) பிச்சேறும்படி
பெரு காதல்,Peru kaadhal - பெரிய காதலையுடையளான
என் பேதைக்கு,En pethakku - என் சொற்கேளாப் பெண்ணுக்கு
வல்வினையேன்,Valvinaiyen - இவளை இப்படிக் கானும்படி ) கொடிய பாபத்தையுடைய நான்
என் செய்தேன்,En seydhen - என்ன செய்வேன்.?