| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3050 | திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (இத்திருவாய்மொழி கற்பவர்கள் எல்லாத்துன்பங்களும் தொலையப்பெற்றுத் திருநாட்டிலே நித்யஸூரிகள் ஆதரிக்கும்படியான பெருமைபெற்று மகிழ்வரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன் சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும் நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித் தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11 | வல்வினை,Valvinai - ஸகல பாபங்களையும் தீர்க்கும் கண்ணனை,Theerkkum Kannani - போக்குமியல்வினனான க்ருஷ்ணனை வண் குருகூர் சடகோபன்,Van Kurugoor Sadagopan - வளப்பமுடைய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் சொல் வினையால்,Sol vinayal - சொல்லுந் தொழில் வன்மையால் சொன்ன பாடல்,Sonna paadal - அருளிச் செய்த பாட்டுக்கள் ஆயிரத்துள் இவை பத்தும்,Aayiraththul ivai patthum - ஆயிரத்துள் இவை பத்துப்பாட்டுக்களையும் நல் வினை என்று கற்பார்கள்,Nal vinai endru karporgal - இது நல்ல செய்கை என்று கருதிக் கற்குமவர்கள் நலன் உடை,Nalan udai - (பகவதநுபவமாகிற) ஆனந்தத்தை யுடைத்தான வைகுந்தம் நண்ணி,Vaikuntham nanni - பரமபதத்தைக் கிட்டி தொல்வினை தீர,Tolvinai theera - அநாதியான பாபங்கள் மறுவிலடாதபடி ஒழிய எல்லாரும் தொழுது எழ,Ellarum thozhuthu ezha - பெரியகிளர்த்தியை யுடையராம்படியாக வீற்றிருப்பார்,Veetriruppar - இருக்கப்பெறுவர்கள். |