திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3050 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3050திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (இத்திருவாய்மொழி கற்பவர்கள் எல்லாத்துன்பங்களும் தொலையப்பெற்றுத் திருநாட்டிலே நித்யஸூரிகள் ஆதரிக்கும்படியான பெருமைபெற்று மகிழ்வரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன் சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும் நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித் தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11
பதவுரை Show / Hide
வல்வினை,Valvinai - ஸகல பாபங்களையும்
தீர்க்கும் கண்ணனை,Theerkkum Kannani - போக்குமியல்வினனான க்ருஷ்ணனை
வண் குருகூர் சடகோபன்,Van Kurugoor Sadagopan - வளப்பமுடைய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்
சொல் வினையால்,Sol vinayal - சொல்லுந் தொழில் வன்மையால்
சொன்ன பாடல்,Sonna paadal - அருளிச் செய்த பாட்டுக்கள்
ஆயிரத்துள் இவை பத்தும்,Aayiraththul ivai patthum - ஆயிரத்துள் இவை பத்துப்பாட்டுக்களையும்
நல் வினை என்று கற்பார்கள்,Nal vinai endru karporgal - இது நல்ல செய்கை என்று கருதிக் கற்குமவர்கள்
நலன் உடை,Nalan udai - (பகவதநுபவமாகிற) ஆனந்தத்தை யுடைத்தான
வைகுந்தம் நண்ணி,Vaikuntham nanni - பரமபதத்தைக் கிட்டி
தொல்வினை தீர,Tolvinai theera - அநாதியான பாபங்கள் மறுவிலடாதபடி ஒழிய
எல்லாரும் தொழுது எழ,Ellarum thozhuthu ezha - பெரியகிளர்த்தியை யுடையராம்படியாக
வீற்றிருப்பார்,Veetriruppar - இருக்கப்பெறுவர்கள்.