| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3053 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (திருவாய்மொழி அடிமை செய்யப்பெறுகையால் தமக் குண்டான ஆனந்தம் எம்பெருமானுடைய ஆனந்தத்தையும் அதிசயித்தது என்கிறார்.) 3 | வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்; வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3 | வீவு இல் இன்பம்,Veeyu il inbam - அழிவில்லாத ஆனந்தமானது மிக எல்லை நிகழ்ந்த,Miga ellai nigazhndha - மிகுதியான எல்லையிலே வர்த்திக்கிற (படியினாலே) நம் அச்சுதன்,Nam achyudhan - அச்சுதன் என்னும் திருநாமத்தையுடையனாய் வீவு இல் சீரன்,Veeyu il seeran - முடிவில்லாத வைலக்ஷண்யத்தையடையனாய் மலர்கண்ணன்,Malarkannan - தாமரை மலர்போன்ற கண்களையடையனாய் விண்ணோர் பெருமான் தன்னை,Vinnor perumaan thannai - விண்ணோர்க்குத் தலைவனானவனை லீவு இல் காலம்,Leeyu il kaalam - ஒழிவில்லாத காலமெல்லாம் இசை மாலைகள்,Isai maalaigal - இசைமிக்க சொல்மாலைகளாலே ஏத்தி,Yethi - துதித்து மேவ பெற்றேன்,Meva petren - கிட்டப்பெற்றேன்; மேவி,Mevi - கிட்டி வீவு இல்,Veeyu il - முடிவில்லாத இன்பம்,Inbam - ஆனந்தத்தினுடைய மிக எல்லை,Miga ellai - முடிவான எல்லையிலே நிகழ்ந்தனன்,Nigazhndhanan - இராநின்றேன். |