Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3054 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3054திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (நித்ய ஸூரி நாதனாயிருந்து வைத்து நித்ய ஸம்ஸாரியான என் பக்கலில் பண்ணி யருளின மஹோபகாரம் என்னே! என்று ஈடுபடுகிறார்.) 4
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4
மேவி நின்று,Mevi ninru - நெஞ்சு பொருந்தியிருந்து
தொழுவார்,Thozhuvaar - அனுபவிப்பாருடைய
வினை போக,Vinai poga - பாபங்கள் யாவும் நசிக்கும்படி
மேவும்,Mevum - தான் அவர்களோடே கலக்கின்ற
பிரான்,Piraan - மஹோபகாரகனாய்
துர்வி அம் புள்,Thurvi am pull - சிறகுகளையுடைய அழகிய பெரிய திருவடியை
உடையான்,Udaiyaan - ஊர்தியாகவுடையனாய்
அடல் ஆழி,Adal aazhi - போர்வல்ல திருவாழியை யுடையனான
அம்மான் தன்னை,Ammaan thannai - ஸர்வேச்வரனை
நா இயலால்,Naa iyalaal - நாவினுடைய தொழிலாலே
இசை மாலைகள்,Isai maalaigal - இசைரூபமான் மாலைகளையிட்டு
ஏத்தி நண்ண பெற்றேன்,Yethi nanna petren - ஏத்துகையாகிய நண்ணுதலைப் பெற்றேன்;
ஆவி,Aavi - எனக்கு அந்தாராத்ம பூதனான எம்பெருமான்
என் ஆவியை,En aaviyai - என்னுடைய ஆத்மாவை
செய்த ஆற்றை,Seydha aatrai - இங்ஙனம் செய்த ப்ரகாரத்தை
யான் அறியேன்,Yaan ariyen - நான் அறியமாட்டேன்.