| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3054 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (நித்ய ஸூரி நாதனாயிருந்து வைத்து நித்ய ஸம்ஸாரியான என் பக்கலில் பண்ணி யருளின மஹோபகாரம் என்னே! என்று ஈடுபடுகிறார்.) 4 | மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்; ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4 | மேவி நின்று,Mevi ninru - நெஞ்சு பொருந்தியிருந்து தொழுவார்,Thozhuvaar - அனுபவிப்பாருடைய வினை போக,Vinai poga - பாபங்கள் யாவும் நசிக்கும்படி மேவும்,Mevum - தான் அவர்களோடே கலக்கின்ற பிரான்,Piraan - மஹோபகாரகனாய் துர்வி அம் புள்,Thurvi am pull - சிறகுகளையுடைய அழகிய பெரிய திருவடியை உடையான்,Udaiyaan - ஊர்தியாகவுடையனாய் அடல் ஆழி,Adal aazhi - போர்வல்ல திருவாழியை யுடையனான அம்மான் தன்னை,Ammaan thannai - ஸர்வேச்வரனை நா இயலால்,Naa iyalaal - நாவினுடைய தொழிலாலே இசை மாலைகள்,Isai maalaigal - இசைரூபமான் மாலைகளையிட்டு ஏத்தி நண்ண பெற்றேன்,Yethi nanna petren - ஏத்துகையாகிய நண்ணுதலைப் பெற்றேன்; ஆவி,Aavi - எனக்கு அந்தாராத்ம பூதனான எம்பெருமான் என் ஆவியை,En aaviyai - என்னுடைய ஆத்மாவை செய்த ஆற்றை,Seydha aatrai - இங்ஙனம் செய்த ப்ரகாரத்தை யான் அறியேன்,Yaan ariyen - நான் அறியமாட்டேன். |