Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3055 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3055திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வஸூ தேவ க்ருஹே அவதீர்ணனாய் -அர்ஜுனன் வ்யாஜத்தாலே சர்வாத்மாக்களுக்கும் சகல வேதார்த்த ப்ரகாசகனாய் இருந்த தன்னை எனக்கு சாத்மிக்க சாத்மிக்கக் காட்டித் தந்து அருளினான் – நானும் அவனைக் கண்டு காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியும் படி திருவாய் மொழி பாடி நாளும் மகிழ்வு எய்தினேன் -என்கிறார்) 5
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5
ஆற்ற,Aatra - பொறுக்கப்பொறுக்க
நல்ல வகை,Nalla vagai - விலக்ஷ்ணமாயுள்ள (ஜ்ஞாந பக்திகள் பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளாகிற) ப்ரகாரங்களை
காட்டும்,Kaattum - அடியார்களுக்குக் காட்டிக் கொடுக்கின்ற
அம்மானை,Ammaanai - சர்வேச்வரனாய்
அமரர் தம் ஏற்றை,Amarar tham etrai - நித்தியஸூரிநாதனாய்
எல்லாப் பொருளும்,Ellaap porulum - எல்லா அர்த்த விசேஷங்களையும் (கீதோபநிஷந் முகத்தாலே)
விரித்தானை,Viriththaanai - விரிவாக உபதேசித்தவனான
எம்மான் தன்னை,Emmaan thannai - எம்பெருமானை
வினை,Vinai - பாபங்களும்
நோய்கள்,Noykal - பெரிய வ்யாதிகளும்
காற்றின் முன்னம் கடுகி,Kaatrin munnam kadugi - காற்றிலும் வேகமாக ஓடிப்போய்
கரிய,Kariya - வெந்துபோம்படியாக
மாற்றம் மாலை புனைந்து,Maatram maalai punainthu - சொல்மாலையைத் தொடுத்து
ஏத்தி,Yethi - துதித்து
நாளும்,Naalum - ஸர்வகாலமும்
மகிழ்வு எய்திளேன்,Magizhvu eythilaen - மகிழ்ச்சியைப்பெற்றேன்