| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3056 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (‘ஆழ்வீர் ! உமக்கு வேண்டுவது என் ? என்று எம்பெருமான் கேட்க, இது வரையில் நான் பெறாதே இனி ஸாதித்துத் தரவேண்டுவதொரு பொருளுண்டோ வென்கிறார்.) 6 | கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6 | கரிய மேனி மிசை,Kariya meni misai - (திருக்கண்ணின்) கூரிய விழியின் மேலே வெளிய நீறு,Veliya neeyru - அஞ்சன நீற்றினை சிறிதே இடும்,Siridhey idum - அளவாக அணிகிற பெரிய கோலம்,Periya kolam - அளவிறந்த அழகினையுடைய தடம் கண்ணன்,Thadam kannan - விசாலமான திருக்கண்களையுடையனாய் விண்ணோர் பெருமான் தன்னை,Vinnor perumaan thannai - நித்யஸூரிகளுக்குத் தலைவனான ஸர்வேச்வரனை உரிய சொல்லால்,Uriya sollaal - (இவ்வழகுக்குத்) தகுதியான சொற்களாலே இசை மாலைகள்,Isai maalaihal - இசைவடிவான மாலைகளையிட்டு ஏத்தி,Yethi - துதித்து உள்ள,Ull - அநுபவிக்க பெற்றேற்கு எனக்கு,Petrerku enakku - பெற்றவனான எனக்கு இன்று தொட்டும்,Indru thottum - இன்று தொடங்கி இனி என்றும்,Ini endrum - இனிமேலுள்ள காலம் எல்லாம் அரியது உண்டோ,Ariyadhu undo - துர்லபமாயிருப்பதும் ஒன்றுண்டோ |