| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3058 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (ஆழ்வார் தம்பக்கலிலே எம்பெருமானுக்குண்டான அபிநிவேஸத்தைக் கண்டு, இப்படிப்பட்ட எம்பெருமானைக் கவி பாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர் என்கிறார்.) 8 | நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8 | நமக்கும்,Namakkum - நித்ய ஸம்ஸாரிகளான நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும்,Poovin misai nangaikkum - தாமரை மலரில் வசிக்கும் பெரிய பிராட்டியாருக்கும் இன்பனை,Inbanai - இன்பமளிப்பவனும் ஞாலத்தார் தமக்கும்,Jnaalathaar thamakkum - லீலாவிபூதியிலுள்ளார்க்கும் வானத்தவர்க்கும்,Vaanathavarkkum - பரமபத வாசிகளுக்கும் பெருமானை,Perumaanai - தலைவனும் தண் தாமரை சுமக்கும்,Than thaamarai sumakkum - குளிர்ந்த தாமரை மலர்சுமக்கும்படியான பாதம் பெருமானை,Paadham perumaanai - திருவடிகளை யுடையனுமான ஸர்வேச்வரன் விஷயத்தில் சொல்மாலைகள்,Solmaaligal - திருவாய்மொழியை சொல்லும் ஆறு,Sollum aaru - சொல்லும்படியாக அமைக்க வல்லேற்கு,Amaikka valleerkku - அமைதியைப்பெற்ற எனக்கு அகல்வானத்து,Akalvaanathu - அகன்ற நித்ய விபூதியிலும் யாவர் இனிநிகர்,Yaavar iningar - யார்தான் இனி ஒப்பாவார்? |