Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3061 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3061திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (இத்திருவாய்மொழி கற்பாருடைய தீ வினைகளையெல்லாம் பெரியபிராட்டியார் தீர்த்தருளக்கூடுமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.–4-5-11
மாரி மாறாத,Maari maaraadha - மழைதப்பாதபடியினாலே
தண்,Than - குளிர்ந்து
அம்,Am - அழகியதான
வேங்கடம் மலை,Vengadam malai - திருவேங்கடம்மலையிலேயுள்ள
அண்ணலை,Annalai - ஸ்வாமி விஷயமாக
வாரி மாறாத,Vaari maaraadha - ஜலஸம்ருத்தி குறையாத
பை பூ பொழில் சூழ்,Pai poo pozhl sooL - பரந்த பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட
குருகூர் நகர்,Kurukoor nagar - திருநகரியில் (அவதரித்த)
காரி மாறன் சடகோபன்,Kaari maaran sadagopan - ஆழ்வார்
சொல்,Sol - அருளிச்செய்த
ஆயிரத்து,Aayiraththu - ஆயிரத்தில்
இப்பத்தால்,Ippathaal - இப்பத்துப் பாசுரங்களினால்,
வேரி மாறாத,Veeri maaraadha - பரிமளம் அறாத
பூ மேல் இருப்பாள்,Poo mel iruppaal - தாமரை மலரிலே நித்ய வாஸம் பண்ணுகிற பிராட்டி
வினை தீர்க்கும்,Vinai theerkkum - எல்லாப் பாபங்களையும் போக்கியருள்பவன்