| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3061 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (இத்திருவாய்மொழி கற்பாருடைய தீ வினைகளையெல்லாம் பெரியபிராட்டியார் தீர்த்தருளக்கூடுமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க் காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால் வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.–4-5-11 | மாரி மாறாத,Maari maaraadha - மழைதப்பாதபடியினாலே தண்,Than - குளிர்ந்து அம்,Am - அழகியதான வேங்கடம் மலை,Vengadam malai - திருவேங்கடம்மலையிலேயுள்ள அண்ணலை,Annalai - ஸ்வாமி விஷயமாக வாரி மாறாத,Vaari maaraadha - ஜலஸம்ருத்தி குறையாத பை பூ பொழில் சூழ்,Pai poo pozhl sooL - பரந்த பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட குருகூர் நகர்,Kurukoor nagar - திருநகரியில் (அவதரித்த) காரி மாறன் சடகோபன்,Kaari maaran sadagopan - ஆழ்வார் சொல்,Sol - அருளிச்செய்த ஆயிரத்து,Aayiraththu - ஆயிரத்தில் இப்பத்தால்,Ippathaal - இப்பத்துப் பாசுரங்களினால், வேரி மாறாத,Veeri maaraadha - பரிமளம் அறாத பூ மேல் இருப்பாள்,Poo mel iruppaal - தாமரை மலரிலே நித்ய வாஸம் பண்ணுகிற பிராட்டி வினை தீர்க்கும்,Vinai theerkkum - எல்லாப் பாபங்களையும் போக்கியருள்பவன் |