Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3062 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3062திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (பராங்குசநாயகியன் தோழியானவள், ‘இந்நோய் பாண்டவபக்ஷ்பாதியான கண்ணபிரானடியாக வந்ததாகையாலே இதற்கு நீங்கள் பரிஹாரமாக நினைத்துச் செய்கிறவை பரிஹாரமல்ல’ என்று க்ஷேபிக்கிறாள்.) 1
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1
அன்னை மீர்,Annai meer - தாய்மார்களே!
இனி,Ini - இப்படிப்பட்ட நிலைமையான பின்பு
தீர்ப்பாரை,Teerpaarai - இந்த நோயைத் தீர்க்க வல்லவர்களை
யாம் எங்ஙனம் நாடுதலும்,Yaam engganam naaduthalum - நாம் எவ்விதமாகத் தேடிப்பிடிக்க முடியும்? (முடியாது)
ஓர்ப்பால்,Oarpaal - நன்கு நிரூபிக்குமளவில்
இ ஓள் நுதல்,Iol nuthal - அழகிய நெற்றியையுடைய இப்பெண்பிள்ளை
உற்ற இது,Uttra idhu - அடைந்திருக்கின்ற இந்த நோயானது
நல் நோய்,Nal noy - விலக்ஷ்ணமான நோயாகும் ;
தேறினோம்,Therinom - திண்ணமாக அறிந்தோம் ;
அன்று,Andru - முன்பொருகாலத்திலே
போர்,Pour - பாரதப்போரிலே
பாகு,Paagu - பாகனாயிருந்து செய்யவேண்டிய காரியங்களை
தான் செய்து,Thaan seydhu - தானே முன்னின்று நடத்தி
ஐவரை,Aivarai - பஞ்சபாண்டவர்களை
வெல்வித்த,Velvitha - ஐயம் பெற்றவர்களாகச் செய்வித்த
மாயம்,Mayam - ஆச்சரிய சத்தியுக்தரும்
போர் தேர் பாகனார்க்கு,Pour ther paaganaarkku - யுத்தபூமியில் தேர்செலுத்தவல்லவருமான பெருமாள் விஷயத்திலே
இவள்,Ival - இப்பராங்குச நாயகியினுடைய
சிந்தை,Sindhai - மனமானது
துழாய்,Thuzhaay - துழாவப்பெற்று
திசைக்கின்றதுஎ,Thisaikkindradhue - அறிவழயா நின்றதே!