| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3063 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (க்ஷுத்ர தெய்வங்களைக் குறித்துப்பண்ணும் சாந்திகளால் இவளுடைய நோய் போக்க வரிது; எம்பெருமானுடைய லக்ஷ்ணங்களைச் சொல்லில் இவளைப் பெறலாமென்கிறாள்.) 2 | திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம் இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2 | (அன்னைமீர்),Annai meer - தாய்மார்களே!, திசைக்கின்றதே,Thisaikkindradhe - நீங்கள் இப்படியும் அறிவு கெடலாகுமோ? இவள் நோய் இது,Ival noy idhu - இப்பெண்பிள்ளைக்கு உண்டாகியிருக்கின்ற இந்நோயானது மிக்க பெரு தெய்வம்,Mikha peru dheivam - பராத்பரமான தெய்வமடியாக வந்தது; இசைப்பு இன்றி,Isaippu indri - தகுதியில்லாதபடி நீர்,Neer - நீங்கள் அணங்கு ஆடும்,Anangu aadum - வெறியாடுவிக்கின்ற இள தெய்வம் அன்று இது,Ila dheivam andru idhu - க்ஷு த்ரதெய்வமடியாக வந்ததன்று இது; (ஆதலால்) திசைப்பு இன்றியே,Thisaippu indriye - மனக்குழப்பம் தவிர்ந்து நீர்,Neer - நீங்கள் இவள்கேட்க,Ival kaetka - இப்பெண்பிள்ளையின் காதில் விழும்படியாக சங்கு சக்கரம் என்று,Sanghu sakkaram endru - சங்கென்றும் சக்கரமென்றும் இசைக்கிற்றிர் ஆகில்,Isaikkindrir aagil - சொல்ல வல்லீர்களானால் தன்றே,Thandre - நலமாகவே இல் பெறும்;,Elperum - (இவள்) இல்லிருப்பப் பெறும்படியாகும்: இது காண்மின்,Idhu kaanmin - இங்ஙனே நடத்திப் பாருங்கள். |