| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3064 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (தவறுதலான செயல்களைச் செய்யாமல் எம்பெருமான் திருவடிகளை வாழ்த்துவதாகிற பரிஹார முறைமையை யனுட்டித்தால் இவளுடைய நோய் தீருமென்கிறாள்.) 3 | இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர் எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்! மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால் அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3 | அன்னை மீர்,Annai meer - தாய்மார்களே! இதுகாண்மின்,Idhu kaanmin - நான் சொல்லுகிற இக்காரியத்தைச் செய்துபாருங்கள்; நீர்,Neer - நீங்கள் இ கட்டுவிச்சி சொல்கொண்டு,I kattuvischi solkondru - இந்தக் குறத்தியின் பேச்சைக் கேட்டு எதுவானாலும் செய்து,Eduvaanalum seydhu - ஸ்வரூப விருத்தமானதைச் செய்து அங்கு,Angu - அவ்விடத்திலே ஓர் கள்ளும் இறைச்சியும்,OrKallum iraichiyum - ஹேயமான மதுவையும் மாம்சஸத்தையும் துர்வேல்மின்,Dhurveelmin - ஆராதனையாக வைக்கவேண்டர் மது ஆர்,Madhu aar - தேன் பொருந்தின துழாய்,Thuzhaai - திருத்துழாய் மாலையை முடி,Mudi - திருமுடியிலணிந்துள்ள மாயம் பிரான்,Maayam piraan - ஆச்சர்ய சக்தியுக்தனான ப்ரபுவினுடைய கழல்,Kazhal - திருவடிகளை நோக்கி வாழ்த்தினால்,Vazhthinaal - மங்களாசாஸனம் பண்ணினால் அதுவே,Adhuvae - அதுதானே இவள் உற்ற நோய்க்கும்,Ival utra noykum - இப்பெண்பிள்ளையடைந் திருக்கிற நோய்க்கும் அரு மருந்து ஆகும்,Aru marundhu aagum - அருமையான மருந்தாகும். |