| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3065 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (எம்பெருமானுடைய திருநாமங்களை இப்பெண்பிள்ளை செவிப்படச் சொல்லுவதே; இந்நோய்க்குப் பரிஹாரமென்கிறாள்.) 4 | மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர் கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்? ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4 | (அன்னை மீர்),(Annai meer) - தாய்மார்களே! மருந்து ஆகும் என்று,Marundhu aagum endru - நோய்க்குப் பரிஹாரமாகுமென்றெண்ணி ஓர் மாயம் அலவை சொல் கொண்டு,Or maayam alavai sol kondu - வஞ்சகச் செய்கைகளையுடையளாயும் தோன்றினபடியே சொல்லுபவளாயமிருக்கின்ற ஒருத்தியின் பேச்சைக்கொண்டு நீர்,Neer - நீங்கள் கரு சோறும்,Karu sorum - கருஞ்சோற்றையும் மற்றை செம்சோறும்,Matrai semsorum - மற்றுள்ள செஞ்சோற்றையும் களன்,Kalan - நாற்சந்தியிலே இழைத்து,Izhaitthu - இடுவதனால் என் பயன்,En payan - என்ன பலனுண்டாம்? (இது வீணான காரியம்;) உலகு ஏழும்,Ulaku ezhum - ஸப்தலோகங்களையும் ஒருங்கு ஆக எ,Orungu aaga e - ஒருகாலே விழுங்கி,Vizhungi - (பிரளம் கொள்ளாதபடி.)உட்கொண்டு உமிழ்ந்திட்ட,Umiizhndittu - பிறகு வெளிப்படுத்தின பெரு தேவன்,Peru devan - பரதேவதையான ஸ்ரீமந்நாராயணனுடைய பேர்,Per - திருநாமங்களை சொல்ல கிற்கில்,Solla kirl - (இவளது காதிலே படும்படி.)சொல்லவல்லீர்களானால் இவளை பெறுதிர்,Ivalai peruthir - இவளை இழவாமே பெறுவீர்கள். |