Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3066 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3066திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (மகளுடைய நோய் தீரவேணு மென்று நீங்கள் பண்ணுகிற பரிஹாரம் நோயை இன்னமும் அதிகப்படுத்தா நின்றதே யன்றித் தீரச்செய்கின்றதில்லையே: ஆனபின்பு இந்த முறைமைகளைவிட்டு நோயின் ஸ்வரூபத்திற்கு யோக்யமான பரிஹார முறைமை அனுஷ்டிக்கப் பாருங்களென்கிறாள்.) 5
இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5
அன்னைமீர்,Annai meer - தாய்மார்களே!
இவளை,Ivalai - இப்பெண்பிள்ளையை
பெறும்பரிசு,Perumparisu - (நோய்தீர்ந்து) நாம் பெறுதற்குரிய மார்க்கம்
இ அணங்கு ஆடுதல் அன்று,I anangu aaduthal andru - வெறியாடுதலாகிற இக்காரியமன்று
அந்தோ,Andho - ஐயோ!இ (இப்பெண்பிள்ளை)
குவளை தட கண்ணும்,Kuvalai thada kannum - குவளை மலர்போன்றதாய் விசாலமான கண்களும்
கோவை செம் வாயும்,Kovai sem vaayum - கோவைக்கனிபோன்று சிவந்த அதரமும்
பயந்தனன்,Payandhanan - வைவர்ணியமடையப்பெற்றாள்:
கவளம்,Kavalam - (இதற்குத்தகுந்த பரிஹாரமென்னவென்றால்) மதகரமான மருந்துகளைக் கவளங்கொண்டதாய்
கடா,Kada - மதம் பெற்றதான
களிறு,Kaliru - (குவலயாபீடமென்னும்) யானையை
அட்ட,Atta - தொலைத்தருளின
பிரான்,Piraan - ஸ்வாமியினுடைய
திருநாமத்தால்,Thirunaamathaal - திருநாமோச்சாரண பூர்வகமாக
தவளம் பொடி கொண்டு,Thavalam podi kondu - பரிசுத்தமான (ஸ்ரீவைஷ்ணவ பாத) தூளியைக் கொண்டு வந்து
நீர் இட்டிடுமின்,Neer ittitumin - நீங்கள் (இவள்மேல்) துர்வுங்கோள்
தணியும்,Thaniyum - (இவளதுநோய்) தீரும்.