| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3066 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (மகளுடைய நோய் தீரவேணு மென்று நீங்கள் பண்ணுகிற பரிஹாரம் நோயை இன்னமும் அதிகப்படுத்தா நின்றதே யன்றித் தீரச்செய்கின்றதில்லையே: ஆனபின்பு இந்த முறைமைகளைவிட்டு நோயின் ஸ்வரூபத்திற்கு யோக்யமான பரிஹார முறைமை அனுஷ்டிக்கப் பாருங்களென்கிறாள்.) 5 | இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ! குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்; கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால் தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5 | அன்னைமீர்,Annai meer - தாய்மார்களே! இவளை,Ivalai - இப்பெண்பிள்ளையை பெறும்பரிசு,Perumparisu - (நோய்தீர்ந்து) நாம் பெறுதற்குரிய மார்க்கம் இ அணங்கு ஆடுதல் அன்று,I anangu aaduthal andru - வெறியாடுதலாகிற இக்காரியமன்று அந்தோ,Andho - ஐயோ!இ (இப்பெண்பிள்ளை) குவளை தட கண்ணும்,Kuvalai thada kannum - குவளை மலர்போன்றதாய் விசாலமான கண்களும் கோவை செம் வாயும்,Kovai sem vaayum - கோவைக்கனிபோன்று சிவந்த அதரமும் பயந்தனன்,Payandhanan - வைவர்ணியமடையப்பெற்றாள்: கவளம்,Kavalam - (இதற்குத்தகுந்த பரிஹாரமென்னவென்றால்) மதகரமான மருந்துகளைக் கவளங்கொண்டதாய் கடா,Kada - மதம் பெற்றதான களிறு,Kaliru - (குவலயாபீடமென்னும்) யானையை அட்ட,Atta - தொலைத்தருளின பிரான்,Piraan - ஸ்வாமியினுடைய திருநாமத்தால்,Thirunaamathaal - திருநாமோச்சாரண பூர்வகமாக தவளம் பொடி கொண்டு,Thavalam podi kondu - பரிசுத்தமான (ஸ்ரீவைஷ்ணவ பாத) தூளியைக் கொண்டு வந்து நீர் இட்டிடுமின்,Neer ittitumin - நீங்கள் (இவள்மேல்) துர்வுங்கோள் தணியும்,Thaniyum - (இவளதுநோய்) தீரும். |