Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3067 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3067திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (கீழ்ப்பாட்டில் “தவளப்பொடிக்கொண்டு நீரிட்டிடுமன்தணியுமே” என்று கூறின தோழியை நோக்கித் தாய்மார் “நீ சொல்லுகிறபொடி இன்னதென்று தெரியவில்லையே!; விளங்கச்சொன்னால் நலம்” என்ன் அதனை விளங்க வுரைக்கின்றாளிப்பாட்டில்.) 6
தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6
அன்னைமீர்,Annai meer - தாய்மார்களே!
தணியும்பொழுது இன்றி,Thaniyum pozhuthu indri - சிறிதும் ஓய்வு இல்லாமல்
நீர் அணங்கு ஆடுதிர்,Neer anangu aaduthir - நீங்கள் வெறியாடுதலைச் செய்வியாநின்றீர்கள்;
பிணியும் ஒழிகின்றது இல்லை,Piniyum ozhiginrathu illai - (இவ்வெறியாடலினால்) நோயோ தீர்கின்றதில்லை;
இது அல்லால்,Ithu allaal - நோய்தீராத மாத்திரமேயன்றிக்கே
பெருகும்,Perugum - மேன்மேலும் வருத்தியுமடைந்து வருகின்றது;
இஅணங்குக்கு,I anangukku - இப்பெண்பிள்ளைக்கு
மணியில் அணி நிறம்,Maniyil ani nirama - நீலமணியிற்காட்டிலும் அழகிய நிறம்படைத்த
மாயன்,Maayan - எம்பெருமானுடைய
தமர்,Thamar - பக்தர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களினுடைய
அடி நீறு கொண்டு,Adi neeru kondu - பாததூளியைக் கொண்டு வந்து
அணிய முயலில்,Aniya muyalil - இடுவதற்கு முயற்சி செய்தால்
மற்று இல்லை கண்டீர்,Matru illai kandeer - (இதோடொத்த பரிஹாரம்) வேறெதுவுமில்லைகிடீர்.