| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3067 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (கீழ்ப்பாட்டில் “தவளப்பொடிக்கொண்டு நீரிட்டிடுமன்தணியுமே” என்று கூறின தோழியை நோக்கித் தாய்மார் “நீ சொல்லுகிறபொடி இன்னதென்று தெரியவில்லையே!; விளங்கச்சொன்னால் நலம்” என்ன் அதனை விளங்க வுரைக்கின்றாளிப்பாட்டில்.) 6 | தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்! பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்; மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6 | அன்னைமீர்,Annai meer - தாய்மார்களே! தணியும்பொழுது இன்றி,Thaniyum pozhuthu indri - சிறிதும் ஓய்வு இல்லாமல் நீர் அணங்கு ஆடுதிர்,Neer anangu aaduthir - நீங்கள் வெறியாடுதலைச் செய்வியாநின்றீர்கள்; பிணியும் ஒழிகின்றது இல்லை,Piniyum ozhiginrathu illai - (இவ்வெறியாடலினால்) நோயோ தீர்கின்றதில்லை; இது அல்லால்,Ithu allaal - நோய்தீராத மாத்திரமேயன்றிக்கே பெருகும்,Perugum - மேன்மேலும் வருத்தியுமடைந்து வருகின்றது; இஅணங்குக்கு,I anangukku - இப்பெண்பிள்ளைக்கு மணியில் அணி நிறம்,Maniyil ani nirama - நீலமணியிற்காட்டிலும் அழகிய நிறம்படைத்த மாயன்,Maayan - எம்பெருமானுடைய தமர்,Thamar - பக்தர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களினுடைய அடி நீறு கொண்டு,Adi neeru kondu - பாததூளியைக் கொண்டு வந்து அணிய முயலில்,Aniya muyalil - இடுவதற்கு முயற்சி செய்தால் மற்று இல்லை கண்டீர்,Matru illai kandeer - (இதோடொத்த பரிஹாரம்) வேறெதுவுமில்லைகிடீர். |