| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3069 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (வேத வித்துக்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து இவளுடைய நோயைத் தீர்த்துக் கொள்ளாதே அற்ப தெய்வங்களைப் பணிதல் உங்களுக்குக் கீழ்மை யென்கிறாள்.) 8 | வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய், ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய், கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8 | (அன்னைமீர்),(Annai meer) - தாய்மார்களே! வேதம் வல்லார்களை கொண்டு,Vedam vallaarkalai kondu - வைதிகர்களான ஸ்ரீவைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு விண்னோர் பெருமான்,Vinnor perumaan - நித்ய ஸூரிநாதனான எம்பெருமானுடைய திருபாதம்,Thirupaadham - திருவடிகளை பணிந்து,Panindhu - அச்ரயித்து இவள் நோய் இது,Ival noyi idhu - இவளுடைய இந்த நோயை தீர்த்துக்கொள்ளாது போய்,Theerthuk kollaadhu poyi - போக்கிக்கொள்ளாமல் ஏதம் பறைந்து,Edham paraindhu - இழிவான பேச்சுகளைப்பேசி அல்ல செய்து,Alla seidhu - ஸ்வரூபத்திற்குத் தகாத காரியங்களைச் செய்து ஊடு,Oodu - நடுநடுவே கள் கலாய் துர்ய்,Kal kalaai durya - தன்னைக் கலந்து துர்வி கீதம் முழவு இட்டு,Geetham muzhavu ittu - வாத்ய கோஷங்களைப் பண்ணி நீர் அணங்கு ஆடுதல்,Neer anangu aaduthal - நீங்கள் வெறியாடுவிக்கின்றவிது கீழ்மையே,Keelmaiye - (இக்குடிக்கு) அவத்யமேயாம் |