Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3069 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3069திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (வேத வித்துக்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து இவளுடைய நோயைத் தீர்த்துக் கொள்ளாதே அற்ப தெய்வங்களைப் பணிதல் உங்களுக்குக் கீழ்மை யென்கிறாள்.) 8
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8
(அன்னைமீர்),(Annai meer) - தாய்மார்களே!
வேதம் வல்லார்களை கொண்டு,Vedam vallaarkalai kondu - வைதிகர்களான ஸ்ரீவைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு
விண்னோர் பெருமான்,Vinnor perumaan - நித்ய ஸூரிநாதனான எம்பெருமானுடைய
திருபாதம்,Thirupaadham - திருவடிகளை
பணிந்து,Panindhu - அச்ரயித்து
இவள் நோய் இது,Ival noyi idhu - இவளுடைய இந்த நோயை
தீர்த்துக்கொள்ளாது போய்,Theerthuk kollaadhu poyi - போக்கிக்கொள்ளாமல்
ஏதம் பறைந்து,Edham paraindhu - இழிவான பேச்சுகளைப்பேசி
அல்ல செய்து,Alla seidhu - ஸ்வரூபத்திற்குத் தகாத காரியங்களைச் செய்து
ஊடு,Oodu - நடுநடுவே
கள் கலாய் துர்ய்,Kal kalaai durya - தன்னைக் கலந்து துர்வி
கீதம் முழவு இட்டு,Geetham muzhavu ittu - வாத்ய கோஷங்களைப் பண்ணி
நீர் அணங்கு ஆடுதல்,Neer anangu aaduthal - நீங்கள் வெறியாடுவிக்கின்றவிது
கீழ்மையே,Keelmaiye - (இக்குடிக்கு) அவத்யமேயாம்