Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3070 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3070திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (நீங்கள் அணங்காடுவதை நான் கண் கொண்டு காண மாட்டேன்; இவள் பிழைக்க வேணுமென்றிருந்தீர்களாகில் கண்ண பிரானுடைய திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கோள் என்கிறாள்.) 9
கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9
(அன்னை மீர்),(Annai meer) - தாய்மார்களே!
கீழ்மையினால்,Keelmaiyinaal - உங்கள் நீசத்தனத்தினால்
அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்,Angu or keelmagan itta muzhavin keel - நீசனான சண்டாளனொருவன் நடத்திப்
போரும் வாத்யகோஷத்தின் சார்பாக-

பல நாழ்மை சொல்லி,Pala naazhmai solli - தப்பு வார்த்தைகள் பலவற்றையுஞ் சொல்லி
நீர் அணங்கு ஆடும் பொய்,Neer anangu aadum poy - நீங்கள் வெறியாடுகின்ற விந்த வம்புவெலையை
காண்கிலேன்,Kaankilein - நான் கண்கொண்டு காணமாட்டேன்:
ஊழ்மையின்,Oozhmaiyin - (சிரமமாகச் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால்) முறைப்படியே
கண்ணபிரான்,Kannapiraan - க்ருஷணபகவானுடைய
கழல்,Kazhal - திருவடிகளை
உன்னித்து,Unnithu - சிந்தித்து
வாழ்த்துமின்,Vazhthumin - மங்களாசாஸநம் பண்ணுங்கள்:
ஈதே,Eedhe - இந்த மங்களாசாஸநமே
ஏழ்மை பிறப்புக்கும்,Ezmai pirappukkum - ஏழேழ் பிறவிக்கும்
சேமம்,Saemam - க்ஷேமகரம்:
இ நோய்க்கும்,I noikkum - இந்த நோய் தீருவதற்கும்
ஈதே மருந்து,Eedhe marunthu - இதுதான் மருந்து.