| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3070 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (நீங்கள் அணங்காடுவதை நான் கண் கொண்டு காண மாட்டேன்; இவள் பிழைக்க வேணுமென்றிருந்தீர்களாகில் கண்ண பிரானுடைய திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கோள் என்கிறாள்.) 9 | கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ் நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்; ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து; ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9 | (அன்னை மீர்),(Annai meer) - தாய்மார்களே! கீழ்மையினால்,Keelmaiyinaal - உங்கள் நீசத்தனத்தினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்,Angu or keelmagan itta muzhavin keel - நீசனான சண்டாளனொருவன் நடத்திப் போரும் வாத்யகோஷத்தின் சார்பாக- பல நாழ்மை சொல்லி,Pala naazhmai solli - தப்பு வார்த்தைகள் பலவற்றையுஞ் சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய்,Neer anangu aadum poy - நீங்கள் வெறியாடுகின்ற விந்த வம்புவெலையை காண்கிலேன்,Kaankilein - நான் கண்கொண்டு காணமாட்டேன்: ஊழ்மையின்,Oozhmaiyin - (சிரமமாகச் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால்) முறைப்படியே கண்ணபிரான்,Kannapiraan - க்ருஷணபகவானுடைய கழல்,Kazhal - திருவடிகளை உன்னித்து,Unnithu - சிந்தித்து வாழ்த்துமின்,Vazhthumin - மங்களாசாஸநம் பண்ணுங்கள்: ஈதே,Eedhe - இந்த மங்களாசாஸநமே ஏழ்மை பிறப்புக்கும்,Ezmai pirappukkum - ஏழேழ் பிறவிக்கும் சேமம்,Saemam - க்ஷேமகரம்: இ நோய்க்கும்,I noikkum - இந்த நோய் தீருவதற்கும் ஈதே மருந்து,Eedhe marunthu - இதுதான் மருந்து. |