| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3071 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இப் பராங்குச நாயகிக்குக் கண்ணபிரான் பக்கலிலுள்ள அளவு கடந்த ப்ராவண்யத்தை யறிந்து நீங்கள் அதற்குத் தகுதியாக நடந்து கொள்வதே யுக்தமென்கிறாள் தோழி.) 10 | உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்; நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்! மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10 | அவனை அல்லால்,Avanai allaal - எம்பெருமானைத் தவிர்த்து மற்று ஒரு தெய்வம்,Matru oru deivam - வேறொரு தெய்வத்தை உன்னித்து,Unnithu - ஒரு வஸ்துவாக நினைத்து தொழாள்,Thozhaal - (இப்பெண்பிள்ளை) தொழுவது கிடையாது: நும்,Num - (இப்படியிருக்க) உங்களுடைய இச்சை,Icchai - மனம் போனபடியே சொல்லி,Solli - (நான் அநுவாதம் செய்யவும் தகாத சொற்களைச்) சொல்லி நும்,Num - உங்களுடைய தோள் குலைக்கப்படும் அன்னை மீர்,Thol kulaikkappadum annai meer - தோள் அசையநிற்கிற தாய்மார்களே!, மன்னப்படும்,Mannappadum - நித்யமாக விளங்குகின்ற வேதங்களினால் பிரதி பாதிக்கப்படுகிறவனும் வண் துவராபதி மன்னனை,Van Dhuvaraapathi mannanai - அழகிய துவாரகாபுரிக்கு அதிபதியுமான எம்பெருமானை ஏத்துமின்,Yaathumin - துதியுங்கோள்: ஏத்தலும்,Yaathalum - துதித்தவுடனே கதொழுது,Kadozhuthu - (இப்பெண்பிள்ளை உணர்த்தி பெற்று, அவனைத்) தொழுது ஆடும்,Aadum - களித்துக் கூத்தாடுவாள். |