Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3072 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3072திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இத்திருவாய்மொழியை அன்போடு அதிகரிக்குமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து படுகையாகிற துக்கமின்றிக்கே வாழப்பெறுவர்கள் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11
தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்க சீலம் இலர்களே.–4-6-11
தொழுது ஆடி,Tozhuthu aadi - வணங்குதலும் கூத்தாடுதலுஞ் செய்து
தூ மணிவண்ணனுக்கு,Thoo manivannanukku - அழகிய நீலமணிபோன்ற நிறமுடையனான எம்பெருமானுக்கு
ஆள் செய்து,Aal seydu - அடிமைத்தொழில் செய்து
நோய் தீர்ந்த,Noy tirnta - நோய் தீரப்பெற்றவரும்,
வழுவாத,Valuvad - அவத்யமடையாத
தொல் புகழ்,Tol pugal - இயற்கையான புகழையுடையவரும்
வண் குருகூர்,Van kurukoor - அழகிய திருநகரிக்குத் தலைவருமான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
சொல்,Sol - அருளிச் செய்த
வழுவாத,Valuvad - குறையற்றதான
ஆயிரத்துள்,Ayirattul - ஆயிரத்தினுள்ளே
வெறிகள்,Verikal - வெறிவிலக்கு விஷயமான
இவை பத்தும்,Ivai pattum - இப்பதிகத்தை
தொழுதும் ஆடி,Tozhutum aadi - தொழுவதும் ஆடவதுமாய்க் கொண்டு
பாட வல்லார்,Pada vallar - பாடவல்லார்கள்
துக்க சீலம் இலர்கள்,Tukka cilam ilarkal - துக்கப்படுந்தன்மையில்லாதவராவர்.