| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3072 | திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இத்திருவாய்மொழியை அன்போடு அதிகரிக்குமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து படுகையாகிற துக்கமின்றிக்கே வாழப்பெறுவர்கள் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11 | தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும் தொழுது ஆடிப் பாடவல்லார் துக்க சீலம் இலர்களே.–4-6-11 | தொழுது ஆடி,Tozhuthu aadi - வணங்குதலும் கூத்தாடுதலுஞ் செய்து தூ மணிவண்ணனுக்கு,Thoo manivannanukku - அழகிய நீலமணிபோன்ற நிறமுடையனான எம்பெருமானுக்கு ஆள் செய்து,Aal seydu - அடிமைத்தொழில் செய்து நோய் தீர்ந்த,Noy tirnta - நோய் தீரப்பெற்றவரும், வழுவாத,Valuvad - அவத்யமடையாத தொல் புகழ்,Tol pugal - இயற்கையான புகழையுடையவரும் வண் குருகூர்,Van kurukoor - அழகிய திருநகரிக்குத் தலைவருமான சடகோபன்,Sadagopan - ஆழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த வழுவாத,Valuvad - குறையற்றதான ஆயிரத்துள்,Ayirattul - ஆயிரத்தினுள்ளே வெறிகள்,Verikal - வெறிவிலக்கு விஷயமான இவை பத்தும்,Ivai pattum - இப்பதிகத்தை தொழுதும் ஆடி,Tozhutum aadi - தொழுவதும் ஆடவதுமாய்க் கொண்டு பாட வல்லார்,Pada vallar - பாடவல்லார்கள் துக்க சீலம் இலர்கள்,Tukka cilam ilarkal - துக்கப்படுந்தன்மையில்லாதவராவர். |