| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3073 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (ஆழ்வார் சில ஞானிகளைச் சிறுமாமனிசர் என்று அருளிச்செய்வதுண்டு; வடிவு சிறுத்து ஞானம் பெருத்தவர்கள் என்கிற காரணத்தாலே அவர்களைச் சிறுமாமனிசரென்கிறது. இப்பாட்டின் முதலடியில் ஒரு விதத்திலே தம்மையும் சிறுமாமனிசராகச் சொல்லிக் கொள்கிறார் போலும். நற்குண மொன்றுமில்லாததனால் சிறியவன்; பண்ணின பாபங்களில் பெரியவன் என்கிறார்) 1 | சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்; ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால், கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1 | சீலம் இல்லா,Seelam illa - நன்மை யொன்று மில்லாத சிறியன் ஏலும்,Siriyan eelum - சிறியவனா யிருந்தேனாகிலும் செய் வினையோ,Sey vinaiyo - செய்த பாபமோ பெரிது,Peridhu - பெரிதாயிருக்கின்றது; ஆல்,Aal - அந்தோ!; ஞாலம் உண்டாய்,Jalam undaay - (பிரளயத்தில்) உலகங்களை உண்டவனே! நாராயணா,Naraayana - நாராயணனே! என்று என்று,Endru endru - என்றிப்படிப் பலகாலும் சொல்லி காலம் தோறும்,Kaalam thorum - எல்லாக்காலத்திலும் யான் இருந்து,Yaan irundhu - நான் ஆசையோடிருந்து கொண்டு கை தலை பூசல் இட்டால்,Kai thalai poosal ittaal - கையைத் தலையிலே வைத்துக் கூப்பிட்டால், கோலம் மேனி,Kolam meni - அழகிய திருமேனியை காண,Kaan - நான் ஸேவிக்குமாறு வாராய்,Vaaraay - வருகிறார்யில்லை; கூவியும் கொள்ளாய்,Kooviyum kollaay - கூவிக் கொள்வதும் செய்கின்றில்லை. |