Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3074 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3074திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (ஏற்கனவே தம் திறத்தில் எம்பெருமான் செய்தருளியிருக்கிற உபகாரங்கள் சிலவற்றைச் சொல்லி ‘இப்படி உபகாரம் செய்தருளின நீ இப்போது உபேக்ஷிப்பது தகுதியோ?’ என்கிறார்.) 2
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என் கண் காண வந்து ஈயாயே.–4-7-2
கொள்ள,Kolla - அநுபவிக்கவநுபவிக்க
மாளா,Maalaa - எல்லைகாணவொண்ணாத
இன்பம் வெள்ளம்,Inbam vellam - ஆனந்தப்பெருக்கை
கோது இல,Kodhu ila - குறையற
தந்திடும்,Thandhidum - உபகரிக்கின்ற
என் வள்ளலே,En vallalae - என் உதாரனே!
வையம் கொண்ட,Vaiyam konda - (மாவலிபக்கல் நீரேற்றுப் பெற்று) உலகங்களையெல்லாம் அளந்து கொண்ட
வாமனா,Vaamana - வாமன்மூர்த்தியே!
ஓ ஓ என்று,Oo oo endru - என்று ஆர்த்தியோடே சொல்லி
நள் இராவும் நன் பகலும்,Nal iraavum nan pagalum - இரவும் பகலும்
நான் இருந்து ஓலமிட்டால்,Naan irundhu oalamittaal - நான் ஆசையோடிருந்து கூப்பிட்டால்
கள்ளம் மாயா,Kallam maayaa - க்ருத்ரிமனான ஆச்சர்ய பூதனே!
உன்னை,Unnai - உன்னை
என் கண் காண,En kan kaana - என் கண்கள் காணுமாறு
வந்து ஈயாய் ஏ,Vandhu eeyaai ae - வந்து ஸேவை ஸாதிக்கின்றிலையே!,