| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3074 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (ஏற்கனவே தம் திறத்தில் எம்பெருமான் செய்தருளியிருக்கிற உபகாரங்கள் சிலவற்றைச் சொல்லி ‘இப்படி உபகாரம் செய்தருளின நீ இப்போது உபேக்ஷிப்பது தகுதியோ?’ என்கிறார்.) 2 | கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என் வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று நள் இராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால் கள்ள மாயா! உன்னை என் கண் காண வந்து ஈயாயே.–4-7-2 | கொள்ள,Kolla - அநுபவிக்கவநுபவிக்க மாளா,Maalaa - எல்லைகாணவொண்ணாத இன்பம் வெள்ளம்,Inbam vellam - ஆனந்தப்பெருக்கை கோது இல,Kodhu ila - குறையற தந்திடும்,Thandhidum - உபகரிக்கின்ற என் வள்ளலே,En vallalae - என் உதாரனே! வையம் கொண்ட,Vaiyam konda - (மாவலிபக்கல் நீரேற்றுப் பெற்று) உலகங்களையெல்லாம் அளந்து கொண்ட வாமனா,Vaamana - வாமன்மூர்த்தியே! ஓ ஓ என்று,Oo oo endru - என்று ஆர்த்தியோடே சொல்லி நள் இராவும் நன் பகலும்,Nal iraavum nan pagalum - இரவும் பகலும் நான் இருந்து ஓலமிட்டால்,Naan irundhu oalamittaal - நான் ஆசையோடிருந்து கூப்பிட்டால் கள்ளம் மாயா,Kallam maayaa - க்ருத்ரிமனான ஆச்சர்ய பூதனே! உன்னை,Unnai - உன்னை என் கண் காண,En kan kaana - என் கண்கள் காணுமாறு வந்து ஈயாய் ஏ,Vandhu eeyaai ae - வந்து ஸேவை ஸாதிக்கின்றிலையே!, |