| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3075 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (நான் விரும்புகிறபடி என் கண்முன்னே வந்து காட்சி தந்தருளத் திருவுள்ளமில்லையாகிலும் ‘-நீ பாவி, உனக்கு நான் காட்சிதரமாட்டேன்” என்கிறவொரு வார்த்தையையாவது என் கண் வட்டத்திலே வந்து சொல்லி போனாலாகாதோவென்கிறார்.) 3 | ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்? தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று, கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண் பனி சோர நின்றால், பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3 | தீ வினைகள்,Thee vinaigal - பாவங்களை ஈவு இலாத,Eevu ilaadha - முடிவில்லாதபடி எத்தனை செய்தனன் கொல்,Eththanai seydhanan kol - எவ்வளவு செய்தேனோ! தாவி,Thaavi - திருவடிகளாலே வியாபித்து வையம்,Vaiyam - உலகங்களை கொண்ட,Konda - ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட எந்தாய்,Endhaay - ஸ்வாமியே! தாமோதரா,Dhamodharaa - தர்மபால் ஆப்புண்ட தழும்பை உதரத்திலுடையவனே! என்று என்று கூவி கூவி,Endru endru koovi koovi - என்று பலகால்சொல்லி இடைவிடாதே கூப்பிட்டு நெஞ்சு உருகி,Nenju urugi - நெஞ்சு நீராயுருகி கண் பனி சோர நின்றால்,Kan pani soora ninraal - கண்ணீர் பெருக நின்றால், பாவியேன்,Paaviyaen - பாவியான நான் காண,Kaana - கண்ணாலே ஸேவிக்ககும்படியாக வந்து,Vandhu - எழுந்தருளி நீ பாவி என்று,Nee paavi endru - ‘(ஆழ்வாரே!) நீர் பாபிகாணும்’ என்று ஒன்று சொல்லாய்,Ondru sollaai - ஒரு வார்த்தையும் சொல்லுகின்றாயில்லை. |