Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3076 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3076திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (பிரமன் முதலிய தேவர்களுக்கும் காணக்கிடைக்காத பெருமானை வடிவழகு காண விரும்பி வெட்கமுற்று நான் கூப்பிடாநின்றேனே! இதற்கு என்ன பலனுண்டு! என்கிறார்.) 4
காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4
வானோர்,Vaanor - பிரமன் முதலிய தேவர்கள்
பேணி,Paeni - விரும்பியும்
காணமாட்டா,Kaanamaattaa - காணமுடியாதபடி
பீடு உடை,Peedu udai - பெருமை வாய்ந்த
அப்பனை,Appanai - ஸ்வாமியை நோக்கி,
ஆணி செம் பொன் மேனி எந்தாய்,Aani sem pon maeni endhaay - “மாற்றுயர்ந்த பொன் போல விரும்பத்தகுந்த திருமேனி படைத்தபிரானே!
தாமரை கண் பிறழ,Thamarai kan pirazha - தாமரைப்பூப்போன்ற திருக்கண்கள் விளங்கும்படி (என்னைப் பார்த்துக் கொண்டு)
காணவந்து,Kaanavandhu - நான் காணுமாறு வந்து
என் கண் முகப்பே,En kan mukappae - என் கண் முன்னே
நின்றருளாய்,Nindrarulaay - நின்றருளவேணும்
என்று என்று,Endru endru - என்று ஓயாதே சொல்லி
சிறு தகையேன் நான்,Siru thakaiyaen naan - நீசனாகிய நான்
நாணம் இல்லா,Naanam illaa - வெட்கம் கெட்டவனாய்க்கொண்டு
இங்கு அலற்றுவது என்,Ingu alatravathu en - இங்கே அலற்றுவதற்கு ஒரு பிரயோஜனமுமில்லையே!.