திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3077 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3077திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (பிரமன் முதலானோர்க்கும் காணமுடியாதிருக்கிற உன்னுடைய அழகைக் காண வேணுமென்று ஆசைப்பட்டு ‘இப்பொழுதே வந்திடாய்’ என்று அபேக்ஷித்து நாம் அபேக்ஷித்தபடியே வந்தருள்வன் என்று நம்பி வரும் போதை யழகைக் காணவேணுமென்று பாரித்திருக்கின்றேனே! என்னுடைய சாபல்யத்தை என் சொல்லுவேன்! என்கிறார்.) 5
அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து, இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5
பதவுரை Show / Hide
அப்பனே,Appanae - உபகாரம் செய்யுமியல்வினனே!
அடல் ஆழியானே,Adal aazhiyanaan - வீரத்தன்மை வாய்ந்த திருவாழியையுடையவனே!
ஆழ் கடலை,Aazh kadalai - ஆழமான கடலை
கடைந்த,Kadaindha - கடைந்து அன்பர்கட்கு அமுதமளித்த
துப்பனே,Thuppanae - ஸமர்த்தனே!
உன் நான்கு தோள்களும்,Un naangu tholgallum - உனது திருத்தோள்கள் நான்கையும்
கண்டிட கூடும் கொல் என்று,Kandida koodum kol endru - ஸேவிக்க நேருமோ! என்று எண்ணி
எப்பொழுதும்,Eppozhudum - எப்போதும்
கண்ணநீர் கொண்டு,Kannaneer kondu - கண்ணீரோடிருந்து
ஆவி துவர்ந்து துவர்ந்து,Aavi thuvarndhu thuvarndhu - பிராணன் மிகவும் உலர்ந்து
இப்பொழுதே வந்திடாய் என்று,Ippozhudhae vandhidaai endru - உடனே எழுந்தருள வேணுமென்று அபேக்ஷித்து
ஏழையேன்,Ezaiyaen - சபலனான நான்
நோக்குவன்,Nokkuvan - சுற்றும் பாராநின்றேன்.