| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3078 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (எம் பெருமானே! என்னுள்ளே நீ நிறைந்திருந்தும் எனக்கு நீ உன்னைக் காட்டாமலிருப்பது திருவுள்ளமில்லாமையன்றோ என்று நான் அறிந்து வைத்தும் அவிவேகத்தாலே காணவாராய்! காணவாராய்! என்று கதறுகின்றேன் என்கிறார்.) 6 | நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6 | நாள் தோறும்,Naal thorum - ஸர்வகாலத்திலும் என்னுடைய,Ennudiya - என்னுடைய ஆக்கை உள்ளும்,Aakkai ullum - சரீரத்தினுள்ளும் ஆவி உள்ளும்,Aavi ullum - ஆத்மாவினுள்ளும் அல் புறத்தின் உள்ளும்,Al purathin ullum - மற்றுமுண்டான இந்த்ரியம் முதலானவற்றிலும் நீக்கம் இன்றி,Neekkam indri - நீங்காமல் (ஒன்றையும் விடாமல்) எங்கும் நின்றாய்,Engum nindraai - எங்கும் வியாபித்திருக்கின்ற பெருமானே! நின்னை,Ninnai - உன்னை அறிந்து அறிந்தே,Arindhu arindhae - (அருள் செய்யத் திருவுள்ளமில்லாதவன் என்று) நன்றாக நான் அறிந்துவைத்தும் யான்,Yaan - நான் உன்னை காண்பான்,Unnai kaanbaan - உனது திவ்யமங்கள விக்ரஹத்தை ஸேவிக்கவேண்டி நோக்கி நோக்கி,Nokki nokki - எல்லாத் திசைகளிலும் பார்த்து எனது ஆவி உள்ளே,Enadu aavi ullae - எனது நெஞ்சுக்குள்ளே நாக்கு நீள்வன்,Naakku neelvan - நாக்கை நீட்டுகின்றேன் (ஆசைப்படுகிறேன்) ஞானம் இல்லை,Gnanam illai - இப்படிப்பட்ட நான் விவேகமற்றவனத்தனை. |