| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3079 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (ஆழ்வீர்! *நாக்கு நீள்வன் ஞானமில்லை* என்று உம்மை நீர் நிந்தித்துக் கொள்வதானது என்னுடைய நிந்தையிலன்றோ முடிந்து நிற்கிறது; உமக்கு நான் ஒரு உபகாரமும் செய்யவில்லைபோலே வருந்துகின்றீரே; நன்கு ஆராய்ந்து பாரும்; எத்தனை உபகாரங்கள் என்னால் பெற்றிருக்கிறீரென்பதை அறிந்து சொல்லும்’ என்று எம்பெருமான் அருளிச்செய்ய, ‘பிரானே! சில உதவிகளை நீ செய்ய நான் பெற்றதுண்டு; அடியோடு ஒன்றுமில்லையென்று சொல்லுகின்றிலேன்; பெற்றவளவு போராது என்கிறேத்தனை’ என்று சொல்லத் தொடங்கி, பெற்ற அளவு இன்னதென்கிறார் இப்பாட்டில்; -பெறவேண்டியதை மேற்பாட்டிலே சொல்ல விருக்கிறார்.) 7 | அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து, பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ; நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7 | நறுதுழாயின் கண்ணி அம்மா,Naruthuzhaayin kanni amma - பரிமளம்மிக்க திருத்துழாய் மாலையையுடைய பெருமானே! நான் உன்னை கண்டுகொண்டு,Naan unnai kandukondu - நான் உன்னை (மாநஸஸாக்ஷ்ர்த்காரமாக) ஸேவிக்கப்பெற்று அறிந்து அறிந்து,Arindhu arindhu - உன்னுடைய உபாயத்வத்தையும் உபேயத்வத்தையும் நன்றாக அறிந்து தேறி தேறி,Thaeri thaeri - மிக்க தெளிவையுடையேனாகி யான்,Yaan - இப்படித் தெளிவுபெற்ற நான் எனது ஆவி உள்ளே,Enadu aavi ullae - என் நெஞ்சுக்குள்ளே நிறைந்த ஞானம் மூர்த்தியாயை,Niraindha gnanam moorthiyaayai - பரிபூர்ண ஜ்ஞானஸ்வரூபனான உன்னை நின்மலம் ஆக வைத்து,Ninmalam aaga vaithu - விசதமாக அநுபவித்து பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்,Piranthum setthum nindru idarum paedhaimai theerndhu ozhindhaen - பிறப்பதும் சாவதுமாயிருந்து படுகிற அஜ்ஞான ஸம்ஸாரத்தைத் தவிர்த்துக் கொள்ளப் பெற்றேன். |