| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3080 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (பெற்ற உபகாரங்களைப் பேசினார் கீழ்ப்பாட்டில்; இனிப் பெறவேண்டுமது தன்னைப் பேசுகிறார் இப்பாட்டில். இந்த ஸம்ஸார நிலந்தன்னிலேயே உன்னைக்கண்டு அடியோங்கள் எல்லாவடிமைகளுஞ் செய்து உஜ்ஜீவிக்கும்படி அருள் புரிய வேண்டு மத்தனையே அபேஷிதமென்கிறார்.) 8 | கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல் எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து, தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8 | வண் துழாயின் கண்ணிவேந்தே!,Van thuzhaayin kanniveendhe - அழகிய திருத்துழாய்மாலையையுடைய நாயனே! கண்டுகொண்டு,Kandugondu - (நெஞ்சினால் காண்கையன்றிக்கே) கண்ணாரக் கண்டு என் கைகள் ஆர,En kaigal aara - எனது கைகள் ஆவல் தீரும்படி நின் திருபாதங்கள் மேல்,Nin thirupaathangal mel - உனது திருவடிகளின் மீது எண் திசையும் உள்ள பூ கொண்டு,En dhisayum ulla poo kondu - எங்குமுள்ள புஷ்பங்களை சேகரித்துக்கொண்டு ஏத்தி,Yaethi - தோத்திரஞ்செய்து பரிமாறி உகந்து உகந்து,Ugandhu ugandhu - மிகவும் உகந்து தொண்ட ரோங்கள்,Thondarongal - அடியோரமான நாங்கள் பாடி ஆட,Paadi aada - பாடுவதாடுவதாம்படி கடல் சூழ் ஞாலத்துள்ளே,Kadal soozh gnaalathullae - கடல் சூழ்ந்த இந்நிலவுலகுக்குள்ளே வந்திடகில்லாயே,Vandhidakillaaye - (என் கண்முகப்பே) வந்து நிற்க மாட்டேனென்கிறாயே |