Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3080 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3080திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (பெற்ற உபகாரங்களைப் பேசினார் கீழ்ப்பாட்டில்; இனிப் பெறவேண்டுமது தன்னைப் பேசுகிறார் இப்பாட்டில். இந்த ஸம்ஸார நிலந்தன்னிலேயே உன்னைக்கண்டு அடியோங்கள் எல்லாவடிமைகளுஞ் செய்து உஜ்ஜீவிக்கும்படி அருள் புரிய வேண்டு மத்தனையே அபேஷிதமென்கிறார்.) 8
கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8
வண் துழாயின் கண்ணிவேந்தே!,Van thuzhaayin kanniveendhe - அழகிய திருத்துழாய்மாலையையுடைய நாயனே!
கண்டுகொண்டு,Kandugondu - (நெஞ்சினால் காண்கையன்றிக்கே) கண்ணாரக் கண்டு
என் கைகள் ஆர,En kaigal aara - எனது கைகள் ஆவல் தீரும்படி
நின் திருபாதங்கள் மேல்,Nin thirupaathangal mel - உனது திருவடிகளின் மீது
எண் திசையும் உள்ள பூ கொண்டு,En dhisayum ulla poo kondu - எங்குமுள்ள புஷ்பங்களை சேகரித்துக்கொண்டு
ஏத்தி,Yaethi - தோத்திரஞ்செய்து பரிமாறி
உகந்து உகந்து,Ugandhu ugandhu - மிகவும் உகந்து
தொண்ட ரோங்கள்,Thondarongal - அடியோரமான நாங்கள்
பாடி ஆட,Paadi aada - பாடுவதாடுவதாம்படி
கடல் சூழ் ஞாலத்துள்ளே,Kadal soozh gnaalathullae - கடல் சூழ்ந்த இந்நிலவுலகுக்குள்ளே
வந்திடகில்லாயே,Vandhidakillaaye - (என் கண்முகப்பே) வந்து நிற்க மாட்டேனென்கிறாயே