Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3081 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3081திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (எம்பெருமான்மேலே பழியிட்டுப் பயன் என்? அவனைக் காண்கைக்கு உபாயமாக பகவத்கீதை முதலான சாஸ்த்ரங்களிலே கூறப்பட்ட கர்மயோகாதிகளுள் ஒன்றிலும் அந்வயமில்லாதிருக்கின்ற நான் கிடந்து கூப்பிடுவதில் என்ன ப்ரயோஜனம்? என்று தம்மில் தாம் சொல்லிக் கொள்ளுகிறாராயிருக்கிறது) 9
இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9
ஒன்று இடகிலேன்,Ondru idakillaen - (இரந்தார்க்கு) ஒரு பிச்சையும் இட்டறியேன்;
ஒன்று அட்டகில்லேன்,Ondru attakillaen - (தாஹித்தவர்களுக்குச்) சிறிது (தண்ணீரும்) வார்த்தறியேன்;
ஐம் புலன்,Aimpulan - இந்திரியங்களைந்தையும்
வெல்லகில்லேன்,Vellakillaen - பட்டிமேயாதபடி அடக்கியாண்டறியேன்;
கடவன் ஆகி,Kadavan aagi - நியதியுடையவனாகி
காலம் தோறும்,Kaalam thorum - உரிய காலங்களிலே
பூ பறித்து ஏத்தகில்லேன்,Poo parithu yaethakillaen - புஷ்பங்களை ஸம்பாதித்து அர்ச்சித்துத் துதித்தறியேன்;
மடம் வல் நெஞ்சம்,Madam val nenjam - (இப்படி அகிஞ்சநனாயிருக்கச் செய்தேயும்) மூர்க்கத்தனமும் கடினத்தன்மையும் பொருந்தின நெஞ்சானது
காதல் கூர,Kaadhal koora - ஆசை விஞ்சிவரப்பெற்று
வல் வினை யேன்,Val vinai yaen - மஹாபாபியான நான்
அயர்ப்பு ஆய்,Ayarppu aai - அவிவேகியாய்
சக்கரத்து அண்ணலை,Sakkarathu annalai - சக்கரபாணியான எம்பெருமானை
தடவுகின்றேன்,Thadavugindren - காணத்தேடுகின்றேன்;
எங்கு காண்பன்,Engu kaanban - எங்கே காணக்கடவேண்?