| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3081 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (எம்பெருமான்மேலே பழியிட்டுப் பயன் என்? அவனைக் காண்கைக்கு உபாயமாக பகவத்கீதை முதலான சாஸ்த்ரங்களிலே கூறப்பட்ட கர்மயோகாதிகளுள் ஒன்றிலும் அந்வயமில்லாதிருக்கின்ற நான் கிடந்து கூப்பிடுவதில் என்ன ப்ரயோஜனம்? என்று தம்மில் தாம் சொல்லிக் கொள்ளுகிறாராயிருக்கிறது) 9 | இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்; கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்; மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த் தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9 | ஒன்று இடகிலேன்,Ondru idakillaen - (இரந்தார்க்கு) ஒரு பிச்சையும் இட்டறியேன்; ஒன்று அட்டகில்லேன்,Ondru attakillaen - (தாஹித்தவர்களுக்குச்) சிறிது (தண்ணீரும்) வார்த்தறியேன்; ஐம் புலன்,Aimpulan - இந்திரியங்களைந்தையும் வெல்லகில்லேன்,Vellakillaen - பட்டிமேயாதபடி அடக்கியாண்டறியேன்; கடவன் ஆகி,Kadavan aagi - நியதியுடையவனாகி காலம் தோறும்,Kaalam thorum - உரிய காலங்களிலே பூ பறித்து ஏத்தகில்லேன்,Poo parithu yaethakillaen - புஷ்பங்களை ஸம்பாதித்து அர்ச்சித்துத் துதித்தறியேன்; மடம் வல் நெஞ்சம்,Madam val nenjam - (இப்படி அகிஞ்சநனாயிருக்கச் செய்தேயும்) மூர்க்கத்தனமும் கடினத்தன்மையும் பொருந்தின நெஞ்சானது காதல் கூர,Kaadhal koora - ஆசை விஞ்சிவரப்பெற்று வல் வினை யேன்,Val vinai yaen - மஹாபாபியான நான் அயர்ப்பு ஆய்,Ayarppu aai - அவிவேகியாய் சக்கரத்து அண்ணலை,Sakkarathu annalai - சக்கரபாணியான எம்பெருமானை தடவுகின்றேன்,Thadavugindren - காணத்தேடுகின்றேன்; எங்கு காண்பன்,Engu kaanban - எங்கே காணக்கடவேண்? |