Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3082 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3082திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (நம்மிடத்தில் ஒரு கைம்முதலுமில்;லாமையை நோக்கி எம்பெருமான் நமக்குக் காட்சி தர விரும்பாமலிருப்பது யுக்தமே; அப்படி அவன் இருக்கும்போது அவனை நாம் மறந்து பிழைக்கலாமன்றோ; அப்படி மறக்கவும் முடியாதபடி அப்பெருமான் மாநஸ ஜ்ஞானத்திற்கு விஷயமாகிக் கொண்டிருக்கிறானே! இதற்கு என்னபண்ணுவேனென்று கிலேசப்படுகிறார்.) 10
சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10
சக்கரத்து அண்ணலே என்று,Sakkarathu annale endru - கையும் சக்கரமுமான அழகைக்காட்டி என்னை ஈடுபடுத்திக்கொண்டவனே! என்று சொல்லி
தாழ்ந்து,Thaazhnthu - அநுபவம் கிடைக்கப்பெறாத க்லேசத்தையடைந்து
கண்நீர் ததும்ப,Kannir thadhumba - கண்ணீர்மல்க
பக்கம் நோக்கி நின்று,Pakkam noakki nindru - சுற்றும் பார்த்து நின்று
அலந்தேன்,Alandhen - தளர்ந்தவனான
பாவியேன்,Paavi yaen - பாவியானநான்
காண்கின்றிலேன்,Kaangindrilaen - காணப்பெறுகின்றிலேன்: (காணக்கிடைக்காதவனை மறந்துவிடலாமென்று பார்த்தாலோ)
மிக்க ஞானம் மூர்த்தி ஆய,Mikka gnanam moorthi aai - மிகுந்த ஞானஸ்வரூபனாய்
வேதம் விளக்கினை,Vedham vilakkina - வேதமாகிற தீபத்தாலே காணப்படும்வனான எம்பெருமானை
என் தக்க,En thakka - எனக்கேற்ற
ஞானம் கண்களாலே,Gnanam kangalaale - ஞானமாகிற கண்ணாலே
கண்டு தழுவுவனே,Kandu thazhuvuvane - கண்டு தழுவிக் கொண்டேயிருக்கிறேனே! (எப்படி மறக்கமுடியும்?)