| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3083 | திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) ((தழுவிநின்ற.) இத்திருவாய்மொழியைக்கற்று ப்ரேம பரவசராமவர்கள் திருநாட்டிலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்காட்டுகிறார்.) 11 | தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக் குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல் வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும் தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11 | தழுவி நின்ற,Thazhuvi nindra - விட்டு நீங்காத காதல் தன்னால்,Kaadhal thannal - (பகவதனுபவத்திலுள்ள) ஆசையினாலே தாமரை கண்ணன் தன்னை,Thamarai kannan thannai - செந்தாமரைக்கண்ணனான எம்பெருமானைக்குறிந்து குழுவு மாடம் தென்குருகூர்,Kuzhuvu madam thenkurugur - திரண்ட மாடங்களையுடைய திருநகரிக்குத் தலைவரான மாறன் சடகோபன்,Maran sadagopan - ஆழ்வார் சொல்,Sol - அருளிச்செய்த வழு இலாத,Vazhu ilaadha - குறையற்ற ஒண் தமிழ்கள்,On tamilkal - அழகிய தமிழ்ப்பாஷையினாலாகிய ஆயிரத்துள்,Ayirathul - ஆயிரம் பாட்டினுள் இ பத்தும்,I pathum - இத்திருவாய்மொழியை தழுவ,Thazhuva - கருத்தோடுகூட பாடி,Paadi - இசைபாடி ஆட வல்லார்,Aada vallaar - களித்துக் கூத்தாடவல்லவர்கள் கைகுந்தம் ஏறுவர்,Vaikundham yeruvar - திருநாட்டில் ஏறப்பெறுவர்கள். |