திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3083 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3083திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) ((தழுவிநின்ற.) இத்திருவாய்மொழியைக்கற்று ப்ரேம பரவசராமவர்கள் திருநாட்டிலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்காட்டுகிறார்.) 11
தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக் குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல் வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும் தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11
பதவுரை Show / Hide
தழுவி நின்ற,Thazhuvi nindra - விட்டு நீங்காத
காதல் தன்னால்,Kaadhal thannal - (பகவதனுபவத்திலுள்ள) ஆசையினாலே
தாமரை கண்ணன் தன்னை,Thamarai kannan thannai - செந்தாமரைக்கண்ணனான எம்பெருமானைக்குறிந்து
குழுவு மாடம் தென்குருகூர்,Kuzhuvu madam thenkurugur - திரண்ட மாடங்களையுடைய திருநகரிக்குத் தலைவரான
மாறன் சடகோபன்,Maran sadagopan - ஆழ்வார்
சொல்,Sol - அருளிச்செய்த
வழு இலாத,Vazhu ilaadha - குறையற்ற
ஒண் தமிழ்கள்,On tamilkal - அழகிய தமிழ்ப்பாஷையினாலாகிய
ஆயிரத்துள்,Ayirathul - ஆயிரம் பாட்டினுள்
இ பத்தும்,I pathum - இத்திருவாய்மொழியை
தழுவ,Thazhuva - கருத்தோடுகூட
பாடி,Paadi - இசைபாடி
ஆட வல்லார்,Aada vallaar - களித்துக் கூத்தாடவல்லவர்கள்
கைகுந்தம் ஏறுவர்,Vaikundham yeruvar - திருநாட்டில் ஏறப்பெறுவர்கள்.