| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3086 | திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) ((மடநெஞ்சால்) கண்ணபிரான் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டாமென்கிறாள்.) 3 | மட நெஞ்சால் குறையில்லா மகள் தாய் செய்து ஒருபேய்ச்சி விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி பட நாகத்து அணைக் கிடந்த பருவரைத் தோட் பரம் புருடன் நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–4-8-3 | மடநெஞ்சால் குறைவு இல்லா ,Mada nenjaal kuraivu illaa - நெஞ்சில் நெகிழ்ச்சியைப் பரிபூர்ணமாகக்கொண்ட தாய் மகள் செய்த,Thaai magal seitha - யசோதையாகிய தாயாகத் தன்னையாக்கிக்கொண்ட ஒரு பேய்ச்சி,Oru peychi - பூதனையென்கிறவொரு பேய்ச்சியினுடைய விடம் நஞ்சம்,Vidam nanjam - கொடிய விஷம்பொருந்திய முலை,Mulai - முலையை சுவைத்த,Suvaitha - உறிஞ்சியுண்டவனும் மிகு ஞானம் சிறு குழவி,Migu jnaanam siru kuzavi - மிக்க ஞானத்தையுடைய சிறு குழந்தையானவனும் படம் நாகம்அணைகிடந்த,Padam naagam anaikidantha - படமெடுத்த நாகமாகிற படுக்கையிலே சயனிப்பவனும் பரு வரை தோள்,Paru varai thol - பெரியமலைபோலே வளர்;த தோள்களையுடையவனும் பரம்புருடன்,Paramburudan - புருஷோத்தமனாக ப்ரஸித்த பெற்றவனும் நெடு மாயன்,Nedu maayan - எல்லைகடந்த ஆச்சர்யகுண சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான் கவராத,Kavaradha - விரும்பாத நிறைவினால் குறைவு இலம்,Niraivinaal kuraivu ilam - அடக்கத்தில் அபேக்ஷயுடையோமல்லோம். |