Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3086 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3086திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) ((மடநெஞ்சால்) கண்ணபிரான் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டாமென்கிறாள்.) 3
மட நெஞ்சால் குறையில்லா மகள் தாய் செய்து ஒருபேய்ச்சி
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பட நாகத்து அணைக் கிடந்த பருவரைத் தோட் பரம் புருடன்
நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–4-8-3
மடநெஞ்சால் குறைவு இல்லா ,Mada nenjaal kuraivu illaa - நெஞ்சில் நெகிழ்ச்சியைப் பரிபூர்ணமாகக்கொண்ட
தாய் மகள் செய்த,Thaai magal seitha - யசோதையாகிய தாயாகத் தன்னையாக்கிக்கொண்ட
ஒரு பேய்ச்சி,Oru peychi - பூதனையென்கிறவொரு பேய்ச்சியினுடைய
விடம் நஞ்சம்,Vidam nanjam - கொடிய விஷம்பொருந்திய
முலை,Mulai - முலையை
சுவைத்த,Suvaitha - உறிஞ்சியுண்டவனும்
மிகு ஞானம் சிறு குழவி,Migu jnaanam siru kuzavi - மிக்க ஞானத்தையுடைய சிறு குழந்தையானவனும்
படம் நாகம்அணைகிடந்த,Padam naagam anaikidantha - படமெடுத்த நாகமாகிற படுக்கையிலே சயனிப்பவனும்
பரு வரை தோள்,Paru varai thol - பெரியமலைபோலே வளர்;த தோள்களையுடையவனும்
பரம்புருடன்,Paramburudan - புருஷோத்தமனாக ப்ரஸித்த பெற்றவனும்
நெடு மாயன்,Nedu maayan - எல்லைகடந்த ஆச்சர்யகுண சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
நிறைவினால் குறைவு இலம்,Niraivinaal kuraivu ilam - அடக்கத்தில் அபேக்ஷயுடையோமல்லோம்.