| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3087 | திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக எருதேழடர்த்த பெருமான் விரும்பாத செவ்விய நிறம் எனக்கு ஏதுக்கென்கிறாள்.) 4 | நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4 | நிறைவினால் குறைவு இல்லா,Niraivinaal kuraivu illaa - குறையற்ற ஸ்த்ரீத்வ பூர்த்தியையடையவளும் நெடு பணை தோள்,Nedupanai thol - நீண்டு பணைத்ததோள்களையுடையவனும் மடம்,Madam - அறிந்தும் அறியாமையாகிற மடப்பம் பொருந்தியவளுமான பின்னை,Pinnai - நப்பின்னையினுடைய முலை அணைவான்,Mulai anaivaan - திருமுலைத்தடத்தோடு சேருகைக்காக (மணப்பதற்காக) பொறையினால்,Poraiyinaal - வருத்தங்களைப் பொறுத்திருந்து பொரு விடை ஏழ் அடாத்து உகந்த,Poru vidai ezh adaatthu ugandha - கொடிய விருஷபங்களேழையும் நொரித்து மகிழ்ந்தவனும் கறையின் ஆர் துவர் உடுக்கை,Karaiyin aar thuvar udukkai - (நாவல் முதலிய காட்டுப்பழங்களின்) கறைமிகுந்த துவர்நிறமான வஸ்த்ரத்தையும் கடையா,Kadaiya - பால்கறக்கும் முங்கிற்குழாயையும் கழிகோல்,Kazhikol - கையிலேஉடையவனும் சறையினார்,Saraianaar - தன்உடம்பைப்பேணாதவனுமான எம்பெருமான் கவராத,Kavaradha - விரும்பாத தளிர்நிறத்தால் குறைவு இலம்,Thalirnirathaal kuraivu ilam - தளிர்போலே செவ்விதான நிறத்தில் விருப்பமுடையோமல்லோம் |