Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3088 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3088திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) ((தளிர்நிறத்தால்) இராமபிரானுடைய சேஷத்வத்திற்கு உறுப்பல்லாத அறிவு எனக்கு வேண்டாவென்கிறாள்.) 5
தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5
தளிர் நிறத்தால் குறைவு இல்லா,Thalir nirathaal kuraivu illaa - தளிர்போன்றழகிய நிறத்தால் பரிபூர்ணையாய்
தனி சிறையில் விளிப்புற்ற,Thani siraiyil vilipputra - தனிச்சிறையிருந்ததனால் ப்ரஸித்தி பெற்றவளாய்
கிளி மொழியாள் காரணம்; ஆ,Kili mozhiyal kaaranam; aa - கிளியினதுபோன்ற இனிய மொழியையுடையளான ஸீதா பிராட்டிநிமித்தமாக
கிளர் அரக்கன் நகர் எரித்த,Kilar arakkan nagar eritha - செருக்கனான இராவணனுடைய பட்டணத்தை நெருப்புக்கு இரையாக்கினவனும்
களி மலர்துழாய் அலங்கல் கமழ் முடியன்,Kali malarthuzhai alangai kamazh mudiyan - தேனையடைய மலரோடுகூடின திருத்துழாய் மாலையாலே பரிமளிக்கின்ற திருமுடியையுடையவனும்
கடல் ஞாலத்து,Kadal gnaalathu - கடல்சூழ்ந்த மண்ணுலகில்
அளிமிக்கான்,Alimikkaan - மிகுந்த அன்பையுடையவனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
அறிவினால் குறைவு இலம்,Arivinaal kuraivu ilam - அறிவில் அபேக்ஷை யுடையோமல்லோம்.