| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3088 | திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) ((தளிர்நிறத்தால்) இராமபிரானுடைய சேஷத்வத்திற்கு உறுப்பல்லாத அறிவு எனக்கு வேண்டாவென்கிறாள்.) 5 | தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5 | தளிர் நிறத்தால் குறைவு இல்லா,Thalir nirathaal kuraivu illaa - தளிர்போன்றழகிய நிறத்தால் பரிபூர்ணையாய் தனி சிறையில் விளிப்புற்ற,Thani siraiyil vilipputra - தனிச்சிறையிருந்ததனால் ப்ரஸித்தி பெற்றவளாய் கிளி மொழியாள் காரணம்; ஆ,Kili mozhiyal kaaranam; aa - கிளியினதுபோன்ற இனிய மொழியையுடையளான ஸீதா பிராட்டிநிமித்தமாக கிளர் அரக்கன் நகர் எரித்த,Kilar arakkan nagar eritha - செருக்கனான இராவணனுடைய பட்டணத்தை நெருப்புக்கு இரையாக்கினவனும் களி மலர்துழாய் அலங்கல் கமழ் முடியன்,Kali malarthuzhai alangai kamazh mudiyan - தேனையடைய மலரோடுகூடின திருத்துழாய் மாலையாலே பரிமளிக்கின்ற திருமுடியையுடையவனும் கடல் ஞாலத்து,Kadal gnaalathu - கடல்சூழ்ந்த மண்ணுலகில் அளிமிக்கான்,Alimikkaan - மிகுந்த அன்பையுடையவனுமான எம்பெருமான் கவராத,Kavaradha - விரும்பாத அறிவினால் குறைவு இலம்,Arivinaal kuraivu ilam - அறிவில் அபேக்ஷை யுடையோமல்லோம். |