திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3089 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3089திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (தன்னைப் பெறுதற்கு உபாயமானவற்றை யெல்லாம் தானே அருளிச் செய்து, ஹிதோபதேசத்திற்குப் பாங்கல்லாதவர்களைத் தன் அழகாலே வசப்படுத்திக் கொள்பவனான பெருமான் விரும்பாத லாவண்யம் எனக்கு எதற்காக? என்கிறாள்.) 6
அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய, நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி, குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6
பதவுரை Show / Hide
அறிவினால் குறைவு இல்லா,Arivinaal kuraivu illaa - ‘நமக்கு அறிவு இல்லையே!’ என்ற குறைபடமாட்டாத
அகல் ஞாலத்தவர் அறிய,Akal gnaalaththavar ariya - விரிவான நிலவுலகிலுள்ளாரனைவரும் அறியும்படியாக
நெறி எல்லாம்,Neri ellaam - (கருமயோகம் முதலிய) ஸகலோபாயங்களையும்
எடுத்து உரைத்த,Eduthu uraitha - ஸாரமாகவெடுத்தருளிச்செய்த
நிறை ஞானம்,Nirai gnaanam - பரிபூர்ண ஞானத்தையுடைய
ஒரு மூர்த்தி,Oru moorthi - விலக்ஷணஸ்வாமியாய்,
குறிய மாண்உருஆகி,Kuriyaa maanuru aaki - வாமந ப்ரஹ்மசாரி வேஷத்தையுடையனாய்
கொடு கோளால்,Kodu kolaal - (மாவலியை வஞ்சிக்கையாகிற) கொடியவழியினால்
நிலம் கொண்ட,Nilam konda - பூமியைத் தன்னதாக்கிக் கொண்ட
கிறி,Kiri - உபாஜ்ஞனான
அம்மான்,Ammaan - எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
கிளர் ஒளியால் குறைவு இலம்,Kilar oliyaal kuraivu ilam - மிகுந்த லாவண்யத்தில் விருப்பமுடையோமல்லோம்.