| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3089 | திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (தன்னைப் பெறுதற்கு உபாயமானவற்றை யெல்லாம் தானே அருளிச் செய்து, ஹிதோபதேசத்திற்குப் பாங்கல்லாதவர்களைத் தன் அழகாலே வசப்படுத்திக் கொள்பவனான பெருமான் விரும்பாத லாவண்யம் எனக்கு எதற்காக? என்கிறாள்.) 6 | அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய, நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி, குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6 | அறிவினால் குறைவு இல்லா,Arivinaal kuraivu illaa - ‘நமக்கு அறிவு இல்லையே!’ என்ற குறைபடமாட்டாத அகல் ஞாலத்தவர் அறிய,Akal gnaalaththavar ariya - விரிவான நிலவுலகிலுள்ளாரனைவரும் அறியும்படியாக நெறி எல்லாம்,Neri ellaam - (கருமயோகம் முதலிய) ஸகலோபாயங்களையும் எடுத்து உரைத்த,Eduthu uraitha - ஸாரமாகவெடுத்தருளிச்செய்த நிறை ஞானம்,Nirai gnaanam - பரிபூர்ண ஞானத்தையுடைய ஒரு மூர்த்தி,Oru moorthi - விலக்ஷணஸ்வாமியாய், குறிய மாண்உருஆகி,Kuriyaa maanuru aaki - வாமந ப்ரஹ்மசாரி வேஷத்தையுடையனாய் கொடு கோளால்,Kodu kolaal - (மாவலியை வஞ்சிக்கையாகிற) கொடியவழியினால் நிலம் கொண்ட,Nilam konda - பூமியைத் தன்னதாக்கிக் கொண்ட கிறி,Kiri - உபாஜ்ஞனான அம்மான்,Ammaan - எம்பெருமான் கவராத,Kavaradha - விரும்பாத கிளர் ஒளியால் குறைவு இலம்,Kilar oliyaal kuraivu ilam - மிகுந்த லாவண்யத்தில் விருப்பமுடையோமல்லோம். |