| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3090 | திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (ஆச்ரித விரோதியான இரணியனைப் பிளந்தொழிந்த நரஸிம்ஹன் விரும்பாத வளை எனக்கு வேண்டா வென்கிறாள்) 7 | கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து, கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த, வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7 | கிளர்ஒளியால் குறைவு இல்லா,Kilar oliyaal kuraivu illaa - கிளர்கின்ற தேஜஸ்ஸூ நிரம்பப் பெற்ற அரி உரு ஆய்,Ari uru aai - நரசிங்கமூர்த்தியாய் கிளர்ந்து எழுந்து,Kilarndhu ezhundhu - சீறிக்கொண்டு தோன்றி, கிளர் ஒளிய இரணியனது,Kilar oliya iranianathu - மிக்கதேக பொருந்திய இரணியனுடைய அகல் மார்பம்,Akal maarbam - விசாலமான மார்பை கிழித்து உகந்த,Kizhiththu ugandha - இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்தவனும், வளர் ஒளிய,Valar oliya - வளர்கின்ற ஜ்வாலையையுடைய கனல்,Kanal - நெருப்புப் போலேயிருக்கிற ஆழி,Aazhi - சக்கரத்தையும் வலம்புரியன்,Valampuriyan - சங்கையுமுடையவனும், நீலம் மணி வளர் ஒளியான்,Neelam mani valar oliyaan - நீலரத்னம் போன்று விளங்குகின்ற திருமேனி விளக்கத்தை யுடையனுமான பெருமான் கவராத,Kavaradha - விரும்பாத வரி வளையால் குறைவு இலம்,Vari valaiyaal kuraivu ilam - அழகிய வளையில் அபேக்ஷ யுடையோமல்லோம். |