| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3091 | திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்து விரோதிகளைத் தொலைத்து அமரர்கள் துதிக்க நின்ற பெருமான் விருமாபாத மேகலை எனக்கு ஏதுக்கென்கிறாள்.) 8 | வரி வளையால் குறை யில்லாப் பெரு முழக்கால் அடங்காரை எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த தெரி வரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும் விரி புகழான் கவராத மேகலையால் குறையிலமே.–4-8-8 | முன்,Mun - முன்பொரு காலத்தில் வாவளையல்,Vaavalaiyal - வரிகளையுடைய சங்கில் நின்று முண்டான குறைவு இல்லா பெருமுழக்கால்,Kuraivu illaa perumuzhakkaal - மிக பெரிய கோஷத்தினலே எரி அழலம்,Eri azhalam - கிளர்ந்தெரிகிற (பயமாகிற) அக்கியானது அடங்காரை புக,Adangaarai puga - பகைவர்களிடத்துப் புகும்படியாக ஊதி இரு நிலம்,Oothi iru nilam - (சங்கை) ஊதி விசாலமான பூமண்டலத்தினுடைய துயர்,Thuyar - (பெரும்பாரத்தினுலுண்டான) கஷ்டத்தை தவிர்த்த தெரிவு அரிய சிவன் பிரடன் அமரர் கோன்;,Thavirththa therivu ariya sivan piradan amarar kon; - (இவ்வுபகாரத்திற்காக) அறிய முடியாத சிவன் பிரமன் இந்திரன் ஆகிய இவர்கள் பணிந்து,Panindhu - வணங்கி ஏத்தும்,Yaeththum - துதிக்கப்பெற்ற விரி புகழான்,Viri pugazhaan - பரந்த புகழையுடையனுமான எம்பெருமான் கவராத,Kavaradha - விரும்பாத மேகலையால்,Megalaiyaal - அரைவடத்தில் குறைவு இலம்,Kuraivu ilam - அபேக்ஷையுடையோமல்லோம். |