திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3091 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3091திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்து விரோதிகளைத் தொலைத்து அமரர்கள் துதிக்க நின்ற பெருமான் விருமாபாத மேகலை எனக்கு ஏதுக்கென்கிறாள்.) 8
வரி வளையால் குறை யில்லாப் பெரு முழக்கால் அடங்காரை எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த தெரி வரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும் விரி புகழான் கவராத மேகலையால் குறையிலமே.–4-8-8
பதவுரை Show / Hide
முன்,Mun - முன்பொரு காலத்தில்
வாவளையல்,Vaavalaiyal - வரிகளையுடைய சங்கில் நின்று முண்டான
குறைவு இல்லா பெருமுழக்கால்,Kuraivu illaa perumuzhakkaal - மிக பெரிய கோஷத்தினலே
எரி அழலம்,Eri azhalam - கிளர்ந்தெரிகிற (பயமாகிற) அக்கியானது
அடங்காரை புக,Adangaarai puga - பகைவர்களிடத்துப் புகும்படியாக
ஊதி இரு நிலம்,Oothi iru nilam - (சங்கை) ஊதி விசாலமான பூமண்டலத்தினுடைய
துயர்,Thuyar - (பெரும்பாரத்தினுலுண்டான) கஷ்டத்தை
தவிர்த்த தெரிவு அரிய சிவன் பிரடன் அமரர் கோன்;,Thavirththa therivu ariya sivan piradan amarar kon; - (இவ்வுபகாரத்திற்காக) அறிய முடியாத சிவன் பிரமன் இந்திரன் ஆகிய இவர்கள்
பணிந்து,Panindhu - வணங்கி
ஏத்தும்,Yaeththum - துதிக்கப்பெற்ற
விரி புகழான்,Viri pugazhaan - பரந்த புகழையுடையனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
மேகலையால்,Megalaiyaal - அரைவடத்தில்
குறைவு இலம்,Kuraivu ilam - அபேக்ஷையுடையோமல்லோம்.