Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3095 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3095திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (எம்பெருமானே! ஸர்வரக்ஷண ஸமர்த்தனாய் ஸர்வ நிர்வாஹகனாய் நீ யிருக்க, இந்த ஸம்ஸாரிகள் அளவுகடந்த துயரங்களை யநுபவித்துத் கொண்டிருக்குமிருப்பு கண்டு என்னால் பொருத்திருக்க முடியவில்லை; இவர்களுடைய ஆர்த்தியைத் தீர்ப்பதோ, அன்றி இவர்களுடைய இழவை நான் சிந்திக்க வொண்ணாதபடி என்னை முடிப்பதோ செய்யவேணும் என்கிறார்.) 1
நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1
நண்ணாதார்,Nannaathaar - பகைவர்கள்
முறுவலிப்ப,Muruvalippa - மகிழ்ந்து சிரிக்கவும்
நல் உற்றார்,Nal uttraar - நல்ல உறவினர்கள்
தரைந்து ஏங்க,Taraithu aengka - மனமுருகிவருந்தவும்
எண்ஆரா துயர் விளைக்கும்,Enumaara thuyar vilaiyum - எண்ணமுடியாத துன்பங்களை விளைக்கின்ற வையான
இவை உலகு இயற்கை,Ivai ulagu iyarkai - இந்த லோகயாத்ரைகள்
என்ன,Enna - என்ன!;
கண் ஆளா,Kan aalaa - தாயாளுவே!
கடல் கநை;தாய்,Kadal kanaithaay - (தேவர்களுக்கு அமுத மளிக்கக்) கடலைக் கடைந்தவனே!
உன கழற்கே,Una kazharkae - உனது திருவடி வாரத்திலேயே
வரும் பரிசு,Varum parisu - நான் வந்து சேரும்படி
தண்ணாவாது,Thannaavaadhu - காலதாமதமின்றியில்
அடியேனே,Adiyene - அடியேனே
சாம்ஆறு,Saamaaru - மரணமடையும் படி
பணி,Pani - அருள் செய்யவேணும்; (கண்டாய் - முன்னிலையசை)