திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3096 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (கீழ்ப்பாட்டில் “எண்ணுராத்துயர்” என்று ஸமுதாயமாகச் சொன்னதைச் சிறிது விவரித்து, இப்படி இவர்கள் படுகிற துக்கங்களைப் போக்கி யருள மாட்டாயாகில், என்னை யாவது உன் திருவடிவாரத்திலே அழைத்துக் கொண்டருள வேணுமென்கிறர்.) 2 | சாமாறும் கெடுமாறும் தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை?
ஆமாறு ஒன்று அறியேன் நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2 | பதவுரை Show / Hideசாம் ஆறும்,Saam aarum - திடீரென்று மரண மடைவதும் கெடும் ஆறும்,Kedum aarum - பலவகைக்கஷ்டங்களையடைவதும் (இதுகாரணமாக) தமர்,Thamar - தாயாதிகளும் உற்றார்,Urraar - உறவினர்களும் தலைத்தலைப்பெய்து,Thalai thalaipeythu - ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து நான்காம்பத்து ஒன்பதாந்திருர்ய்மொழி,Naankaam pathu onpathaandhirury mozhii - நண்ணுதாத்முறுலலிப்ப ஏமாறி கிடந்து அலற்றும் இவை உலகு இயற்கை என்ன,Emaari kidaanthu alatrum ivai ulagu iyarkai enna - ஏங்கிக்கிடந்து கதலும் படியான இந்த லோக யாத்ரைகள் என்னே! அரவு அணையாய் அம்மானே!,Aravu anaiyaam ammaane! - சேஷசாயியான ஸ்வாமியே! நான்,Naan - அடியேன் ஆம் ஆறு ஒன்று அறியேன்,Aam aarum ondru ariyen - உய்யும்வகையைச் சிறிது மறிகின்றிலேன்; அடியேனை குறிக்கொண்டு கூம் ஆறு,Adiyenai kuri kondhu koom aarum - இப்படிப்பட்ட அடியேனை திருவுள்ளம் பற்றி (திருவடிவாரத்திலே) அழைத்துக்கொள்ளும்படி விரை,Virai - விலைந்தருயவேணும். |