| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3097 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –4-9-3- ஜந்துக்கள் ஆபிஜாத் யாதிகள் எல்லாம் கிடக்க முடிகிறபடியைக் கண்டு ஒன்றும் பொறுக்க மாட்டு கிறி லேன் -இத்துக்கங்களை அனுசந்திக்க வேண்டாதே உன் திருவடிகளில் அழைத்து அடிமை கொள்ள வேணும் என்கிறார்) (இப்பாசுரத்திற்கு ஈடு முப்பத்தயறயிரப்படி ஸ்ரீஸூக்திகள் இன்சுவையே வடிவெடுத்தவை.) 3 | கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும் வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல் கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல் வண்ணா! அடியேனைப் பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3 | கொண்டாட்டும்,Kondaatum - (புதிதாகச் சிலர்ஏறிட்டுச்செய்கிற) கொண்டாட்டமும் குலம் புனைவும்,Kulam punaivum - இல்லாத குலத்தை ஏறிட்டுக்கொண்டு அஹங்கரிப்பதும் தமர்,Thamar - தாயாதிகளும் உற்றர்,Utrar - உறவினரும் விழு நிதியும்,Vizhu nidhiyum - அளவற்ற செல்லமும் வண்டு ஆர் பூ குழலாளும்,Vantu aar poo kuzhalalum - வண்டுகள் படிந்த பூக்கள் நிறைந்த கூந்தலையுடைய மனைவியும் மனை,Manai - வீடும் (ஆகிய இவை) ஒழிய,Ozhia - தன்னைவிட்டு நீங்க உயிர் மாய்தல்,Uyir maaydhal - (தீடீரென்று) இறந்து போவதாகிற உலகு இயற்கை கண்டு,Ulagu iyarkai kandu - இந்த லோகயாத்திரையைக்கண்டு ஆற்றேன்,Aatren - ஸஹிக்கமாட்டேன்; கடல் வண்ணு,Kadal vannu - கடல் வண்ணனான எம்பெருமானே! அடியேனை,Adiyenai - அடியனான என்னை பண்டே போல் கருதாது,Pande pol karuthaadhu - இத்தனை நாளும்போல் நினைத்திராமல் உன் அடிக்கே கூய் பணி கொள்,Un adikke koo pani kol - உன் திருவடிவாரத்திலே அழைத்துக் கொண்டு அடிமை கொண்டருளவேணும். |