Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3097 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3097திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –4-9-3- ஜந்துக்கள் ஆபிஜாத் யாதிகள் எல்லாம் கிடக்க முடிகிறபடியைக் கண்டு ஒன்றும் பொறுக்க மாட்டு கிறி லேன் -இத்துக்கங்களை அனுசந்திக்க வேண்டாதே உன் திருவடிகளில் அழைத்து அடிமை கொள்ள வேணும் என்கிறார்) (இப்பாசுரத்திற்கு ஈடு முப்பத்தயறயிரப்படி ஸ்ரீஸூக்திகள் இன்சுவையே வடிவெடுத்தவை.) 3
கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல் வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3
கொண்டாட்டும்,Kondaatum - (புதிதாகச் சிலர்ஏறிட்டுச்செய்கிற) கொண்டாட்டமும்
குலம் புனைவும்,Kulam punaivum - இல்லாத குலத்தை ஏறிட்டுக்கொண்டு அஹங்கரிப்பதும்
தமர்,Thamar - தாயாதிகளும்
உற்றர்,Utrar - உறவினரும்
விழு நிதியும்,Vizhu nidhiyum - அளவற்ற செல்லமும்
வண்டு ஆர் பூ குழலாளும்,Vantu aar poo kuzhalalum - வண்டுகள் படிந்த பூக்கள் நிறைந்த கூந்தலையுடைய மனைவியும்
மனை,Manai - வீடும் (ஆகிய இவை)
ஒழிய,Ozhia - தன்னைவிட்டு நீங்க
உயிர் மாய்தல்,Uyir maaydhal - (தீடீரென்று) இறந்து போவதாகிற
உலகு இயற்கை கண்டு,Ulagu iyarkai kandu - இந்த லோகயாத்திரையைக்கண்டு
ஆற்றேன்,Aatren - ஸஹிக்கமாட்டேன்;
கடல் வண்ணு,Kadal vannu - கடல் வண்ணனான எம்பெருமானே!
அடியேனை,Adiyenai - அடியனான என்னை
பண்டே போல் கருதாது,Pande pol karuthaadhu - இத்தனை நாளும்போல் நினைத்திராமல்
உன் அடிக்கே கூய் பணி கொள்,Un adikke koo pani kol - உன் திருவடிவாரத்திலே அழைத்துக் கொண்டு அடிமை கொண்டருளவேணும்.