| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3099 | திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (பிறப்பது மிறப்பதுமாய் நோவு பட்டுத் திரிகிற இந்த ஸம்ஸாரிக்ள நடுவில்நின்றும் இத் துன்பம் நடையாடாத தேச விசேஷத்திலே யென்னை யழைத்துக் கொண்டருள வேணுமென்கிறார்.) 5 | வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும் ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப் புண்ணும்; ஈங்கு இதன் மேல் வெந் நரகம்; இவை என்ன உலகியற்கை! வாங்கு எனை நீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5 | வாங்கும்,Vaangum - உலகங்களை யெல்லாம் பிறகு தன் பக்கலிலே ஸம்ஹரித்துக் கொள்ள வல்லதான நீர்,Neer - நீரிலே மலர்,Malar - மலர்ந்த நிற்பனவும்,Nirpanavum - ஸ்தாவரங்களும் திரிவனவும்,Thirivanavum - ஜங்கமங்களுமான ஆங்கு,Aangu - அவ்வவ்விடங்களிலுள்ள உயிர்கள்,Uyirkal - பிராணிகள் ஈங்கு,Eenggu - இப்புவியில் பிறப்பு இறப்பு பிணி மூப்பால்,Pirappu irappu pinimubal - பிறப்பது இறப்பது வியாதி கொண்டிருப்பது கிழத்தன மடைவது ஆகிய இவற்றாலே தகர்ப்புண்ணும்,Thakarppunnum - வருந்திக்கிடக்கும்; இதன் மேல்,Idhan mel - இறந்தொழிந்தபின்போ வென்னில் வெம் நரகம்,Vem naragam - கொடிய நரக வேதனையாம்; (இவை என்ன உலகு இயற்கை!;) நீ,Nee - நீ எனை,Enai - இத்துயரம் பொறுக்க மாட்டாத என்னை வாங்கு,Vaanggu - அங்கீகரித்தருளவேணும் அடியனே,Adiyanee - உன்னடியனான என்னை மறுக்கேல்,Marukel - கலங்கப் பண்ண வேண்டா. |