Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3102 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3102திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (‘ஆழ்வீர்! நீர் விரும்பியபடியே நாம் செய்கிறோம் என்று எம்பெருமான் அருளிச் செய்ய, அது என்றைக்குச் செய்வதாகத் திருவுள்ளமோ? என்கிறார்.) 8
காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8
நீ,Nee - நீ (எம்பெருமானே)
காட்டி,Kaatti - படைக்கும்போது பிரகாசிப்பித்து
கரந்து,Karandhu - (பிரளய காலத்திலே) உள்ளே மறைத்து
உமிழுத்,Uzhuth - மறுபடியும் வெளிப்படுத்துகின்ற
நிலம் நீர் தீ விசும்பு கால்,Nilam neer thee visumbu kaal - பஞ்ச பூதங்களையும்
ஈட்டி வைத்து,Eetti vaithu - ஒன்றாகத் திரட்டி வைத்து
அமைத்த,Amaitha - ஒழுங்கு படுத்திய
இமையோர் வாழ தனி முட்டை,Imayor vaazha thani muttai - பிரமாண்டமாகிற
கோட்டையினில்,Kottaiyinil - கோட்டையில் நின்றும்
என்னை கழித்து,Ennai kuzhithu - என்னை அப்புறப்படுத்தி
உன்,Un - உன்னுடைய
கொடு சோதி உயரத்து,Kodu sothi uyarathu - மிக்க வொளியுருவமாய் எல்லாவற்றினும் உயர்ந்ததான் திருநாட்டிலே
கூட்டு அரிய,Kootu ariya - கூடுதற்கரியான
திருவடிக்கண்,Thiruvadikkan - திருவடிகளிலே
எஞ்ஞான்று,Yennyantru - என்றைக்கு
கூட்டுதி,Kootuthi - கூட்டிக்கொள்வாய்!