| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3106 | திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 1 | ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள் நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1 | தேவும், thevum - தேவர்களும் உலகும், ulagum - அவர்களுக்கிருப்பிடமான உலகங்களும் உயிரும், uyirum - மனிதர் முதலிய பிராணிகளும் மற்றும் யாதும், matrum yaadhum - மற்றுமுள்ள எல்லாமும் ஒன்றும் இல்லா அன்று, ondrum illa andru - சிறிதுமில்லாத அந்த ஊழிக்காலத்திலே நான்முகன் தன்னொடு, naanmugan thannodu - பிரமனையும் தேவர், thevar - தேவதைகளையும் உலகு, ulagu - உலகங்களையும் உயிர், uyir - பிராணிகளையும் படைத்தான், padaithaan - படைத்தவனும் நின்ற, nindra - சாஸ்த்ரங்களில் நிலைத்திருப்பவனுமான ஆதி பிரான், aadhi piraan - ஆதிநாதனென்றும் எம்பெருமான் குன்றம் போல் மணிமாடம் நீடு, kunram pol manimaadam needu - மலைபோன்ற திருமாளிகைகள் உயர்ந்திருக்கப்பெற்ற திருகுருகூர் அதனுள், thirugurukoor adhanul - திருநகரியிலே நிற்க, nirka - காட்சிதந்து கொண்டிருக்கும் போது மற்றைதெய்வம், matraidheivam - வேறுதெய்வங்களை நாடுதிர் ஏ, naaduthir ae - தேடியோடுகின்றீர்களே. |