Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3106 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3106திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 1
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1
தேவும், thevum - தேவர்களும்
உலகும், ulagum - அவர்களுக்கிருப்பிடமான உலகங்களும்
உயிரும், uyirum - மனிதர் முதலிய பிராணிகளும்
மற்றும் யாதும், matrum yaadhum - மற்றுமுள்ள எல்லாமும்
ஒன்றும் இல்லா அன்று, ondrum illa andru - சிறிதுமில்லாத அந்த ஊழிக்காலத்திலே
நான்முகன் தன்னொடு, naanmugan thannodu - பிரமனையும்
தேவர், thevar - தேவதைகளையும்
உலகு, ulagu - உலகங்களையும்
உயிர், uyir - பிராணிகளையும்
படைத்தான், padaithaan - படைத்தவனும்
நின்ற, nindra - சாஸ்த்ரங்களில் நிலைத்திருப்பவனுமான
ஆதி பிரான், aadhi piraan - ஆதிநாதனென்றும் எம்பெருமான்
குன்றம் போல் மணிமாடம் நீடு, kunram pol manimaadam needu - மலைபோன்ற திருமாளிகைகள் உயர்ந்திருக்கப்பெற்ற
திருகுருகூர் அதனுள், thirugurukoor adhanul - திருநகரியிலே
நிற்க, nirka - காட்சிதந்து கொண்டிருக்கும் போது
மற்றைதெய்வம், matraidheivam - வேறுதெய்வங்களை
நாடுதிர் ஏ, naaduthir ae - தேடியோடுகின்றீர்களே.